search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SP Rajkumar"

    விஜய்யை வைத்து சுறா படத்தை எடுத்த இயக்குனர், அடுத்ததாக நகைச்சுவை நடிகர் யோகிபாபு நடிக்கும் படத்தை இயக்குகிறார்.
    இன்றைக்கும் வடிவேலு நகைச்சுவைக்கு என்று தனியாக ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது என்றால் அதற்கு முதல் காரணம் நகைச்சுவை எழுதுபவர்கள்தான். வடிவேலுவின் பெரும்பாலான நகைச்சுவைக் காட்சிகளை எழுதியவர் எஸ்.பி.ராஜ்குமார். பொதுவெளியில் இரண்டு நபர்களுக்குள் நடக்கும் விஷயத்தை அப்படியே நகைச்சுவை காட்சியாக எழுதி வெற்றி பெற்றவர். 

    விஜய்யை வைத்து சுறா என்ற படத்தையும் எடுத்திருக்கிறார். அந்தப்படத்தில் மருத மலை மாமணியே முருகைய்யா என்ற பாடலை நகைச்சுவையாகக் காட்டி ரசிக்க வைத்திருப்பார். இப்போது எஸ்.பி.ராஜ்குமார் யோகிபாபுவை வைத்து ஒரு படத்தை எடுத்து வருகிறார். நகைச்சுவை காட்சிகள் வித்தியாசமாக வந்துள்ளதாம். 

    எஸ்.பி.ராஜ்குமார்
    எஸ்.பி.ராஜ்குமார்

    இசையமைப்பாளராகவும், திரைப்பட தயாரிப்பாளராகவும் சினிமாவில் இருக்கும் வி.ஆர்.ராஜேஷ் படத்தைத் தயாரிக்கிறார். இவர் கொரோனா பரவல் காரணமாகப் பாதிக்கப்பட்ட பலருக்கு பல்வேறு உதவிகளைச் செய்து வந்தார். இப்போதும்  சாலைகளில் வாழ்வோருக்குத் தினமும் மூன்று வேலை இலவசமாக உணவு பொட்டலங்களை வழங்கி வருகிறார். சமீபத்தில் வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் வாடிய சுமார் 3500 மேடை மெல்லிசை கலைஞர்களின் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கியிருக்கிறார்.
    ×