search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Smuggling of cannabis by train"

    • 9 கிலோ பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    சேலம் உட்கோட்ட ரெயில்வே போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ரெயில்களில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத் தப்படுகிறதா என்பது குறித்து தீவிர சோதனையில் ஈடுபட் டனர்.

    அப்போது ஜார்கண்ட் மாநிலம் சாலிமரிலிருந்து கேரள மாநிலம் திருவனந்தபு ரம் வரை செல்லும் சாலிமர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் காட் பாடி ரெயில் நிலையத்திலி ருந்து ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் வரை தீவிர சோதனை செய்தனர்.

    இந்த சோதனையில் பயணிகள் இருக்கையின் அடியில் வைக் கப்பட்டிருந்த 9 கிலோ கஞ் சாவை பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சாவை கடத்தி வந்ததாக ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிரகாஷ் சுவைன் (வயது 32) மற்றும் அனிதா குமாரி பியோ போயி (37)

    ஆகிய இரண்டு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×