என் மலர்

    நீங்கள் தேடியது "Small savings"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை 0.3 சதவீதம் வரை மத்திய அரசு உயர்த்தியது.
    • விவசாயிகள் கடன் அட்டைக்கான காலவரம்பும், வட்டி விகிதமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    அஞ்சலகங்களில் நடைமுறையில் உள்ள பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கு காலாண்டுக்கு (3 மாதங்கள்) ஒரு தடவை மத்திய அரசு வட்டி விகிதங்களை மாற்றி அமைத்து வருகிறது.

    இந்நிலையில், நடப்பு நிதியாண்டின் 3-வது காலாண்டான அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான 3 மாதங்களுக்கு வட்டி விகிதத்தை மத்திய நிதி அமைச்சகம் நேற்று மாற்றி அமைத்தது.

    அதன்படி, 3 ஆண்டுகால டெபாசிட்டுக்கான வட்டி விகிதம் 5.5 சதவீதத்தில் இருந்து 5.8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, 0.3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

    மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்துக்கான வட்டி 7.4 சதவீதத்தில் இருந்து 7.6 சதவீதமாக உயருகிறது. இது, 0.2 சதவீத உயர்வு ஆகும்.

    விவசாயிகள் கடன் அட்டைக்கான காலவரம்பும், வட்டி விகிதமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    கடந்த மே மாதத்தில் இருந்து பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த கடன்களுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 1.4 சதவீதம் உயர்த்தியுள்ளது. 3 தவணைகளாக இவை உயர்த்தப்பட்டன. அதற்கேற்ப முதலீட்டுக்கான வட்டி விகிதங்களையும் மத்திய அரசு உயர்த்தி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சிறு சேமிப்பு திட்டங்களை ஊக்கப்படுத்தும் விதமாக அவற்றுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு தற்போது உயர்த்தி உள்ளது. #SmallSaving #Interest #RatesHiked
    புதுடெல்லி:

    இந்திய ரிசர்வ் வங்கி கடந்த வாரம் வெளியிட்ட புள்ளிவிவர அறிக்கை ஒன்றில், தபால் நிலைய சேமிப்பு திட்டம், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் மற்றும் பொது வைப்பு நிதி (பி.பி.எப்.) போன்ற பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்கள் அழிந்து போகும் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து மேற்கூறிய சிறு சேமிப்பு திட்டங்களை ஊக்கப்படுத்தும் விதமாக அவற்றுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு தற்போது உயர்த்தி உள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டிற்கு வட்டிவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.

    அதன்படி 5 ஆண்டுகள் வரையிலான மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கு 8.3 சதவீதத்தில் இருந்து 8.7 சதவீதமாக வட்டி உயர்த்தப்படுகிறது. அதே போல் பி.பி.எப். மற்றும் தேசிய சேமிப்பு சான்றிதழ் உள்ளிட்டவற்றுக்கான ஆண்டு வட்டிவிகிதம் 7.6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    மேலும் கிஷான் விகாஸ் பத்திரத்துக்கான வட்டி விகிதம் 7.3 சதவீதத்தில் இருந்து 7.7 சதவீதமாகவும், பெண் குழந்தைக்கான சேமிப்பு திட்டமான சுகன்யா சம்ரிதி திட்டத்தின் வட்டி 8.1 சதவீதத்தில் இருந்து 8.5 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    எனினும், வங்கி சேமிப்பு கணக்குகளுக்கான அடிப்படை வட்டி விகிதம் 4 சதவீதமாகவே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  #SmallSaving #Interest #RatesHiked
    ×