என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "petition dismissed"

    • "செங்கோட்டை மட்டும் ஏன்? ஆக்ரா, பதேபுர் சிக்ரி போன்ற இடங்களில் கோட்டைகள் ஏன் இல்லை”
    • தவறான எண்ணத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு என்று தெரிவித்தனர்.

    முகலாயர் ஆட்சி காலத்தில் டெல்லியில் புகழ்பெற்ற செங்கோட்டை கட்டப்பட்டது. இந்தநிலையில் கடைசி முகலாய அரசர் பகதுார் ஷா ஜாபரின் வாரிசு என்று கூறிக்கொண்டு சுல்தானா பேகம் என்ற பெண் டெல்லி செங்கோட்டை தனக்குத்தான் சொந்தம் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்.

    இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

    "செங்கோட்டை மட்டும் ஏன்? ஆக்ரா, பதேபுர் சிக்ரி போன்ற இடங்களில் கோட்டைகள் ஏன் இல்லை" என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். பின்னர் தவறான எண்ணத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு என்று கூறி சுப்ரீம் கோர்ட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    கடந்த ஆண்டு டெல்லி ஐகோர்ட்டில் இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×