என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடிகை லட்சுமி மஞ்சு"

    • நான் ஆணாதிக்கத்தை பொறுத்துக்கொள்ளவே மாட்டேன்.
    • தனக்கு பிடித்த பெண்ணை காதலிக்க ஒரு ஆண் பல்வேறு முயற்சிகளை செய்வார்.

    தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் மோகன்பாபுவின் மகளும், நடிகையுமான லட்சுமி மஞ்சு தெலுங்கு, இந்தி மொழிகளில் ஏராளமான படங்கள் நடித்துள்ளார். தமிழில் 'கடல்', 'காற்றின் மொழி', 'இஞ்சி இடுப்பழகி', 'பூக்கி' படங்களில் நடித்துள்ளார்.

    இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற லட்சுமி மஞ்சு பேசியது கவனம் ஈர்த்துள்ளது.

    அதில், "நான் ஆணாதிக்கத்தை பொறுத்துக்கொள்ளவே மாட்டேன். திருமணம் என்ற அழகிய பந்தத்தில் ஒருவர் சரியில்லை என்றாலும் அந்த உறவு அர்த்தமற்றதாகி விடும். கணவனின் அடக்குமுறைகளை சகித்து வாழ்வது என்பது அவரவர் விருப்பம். அவர்களிடம் சொல்லிக்கொள்வது ஒன்றுதான். யாரும் நம்மை அடிக்க உரிமை கிடையாது. சுயமரியாதை நமக்கு முக்கியம்.

    ஒருகாலத்தில் காதலை பெற்றோரிடம் சொல்லவே பயந்தோம். இன்றைக்கு 'நான் ஒருவருடன் உறவில் இருக்கிறேன்' என்று கூறும் நிலை வந்திருக்கிறது. சமூக வலைதளங்கள் நம் மனதை அசைத்து பார்த்துவிட்டன.

    தனக்கு பிடித்த பெண்ணை காதலிக்க ஒரு ஆண் பல்வேறு முயற்சிகளை செய்வார். ஆனால் இன்று ஒரு பெண்ணுக்கு அனுப்ப வேண்டிய எஸ்.எம்.எஸ்-ஐ பலருக்கும் காப்பி செய்து அனுப்புகிறேன். உலகம் நிறைய மாறிவிட்டது. இதுபோன்ற ஆசாமிகளை கண்டறிவது பெண்களின் பொறுப்பு தான் என கூறினார்.

    • நான் ஏற்கனவே 30 பள்ளிகளை தத்தெடுத்தேன்.
    • இப்போது மேலும் 20 பள்ளிகளை தத்தெடுத்து இருக்கிறேன்.

    தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகளான லட்சுமி மஞ்சு தமிழில் கடல், இஞ்சி இடுப்பழகி, காற்றின் மொழி ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

    இன்னொரு புறம் சினிமாவைத் தாண்டி சமூகசேவை பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே அரசு பள்ளிகளை தத்தெடுத்து மாணவ, மாணவிகளுக்கு உதவிகளை செய்து வருகிறார்.

    தற்போது தெலுங்கானா மாநிலம் ஜோகுலம்பா கத்வால் மாவட்டத்தில் மேலும் 20 பள்ளிகளை தத்தெடுத்து இருக்கிறார். இதுகுறித்து லட்சுமி மஞ்சு கூறும்போது, "நான் ஏற்கனவே 30 பள்ளிகளை தத்தெடுத்தேன். இப்போது மேலும் 20 பள்ளிகளை தத்தெடுத்து இருக்கிறேன்.

    மொத்தம் 50 பள்ளிகளை தத்தெடுத்தது மகிழ்ச்சியாக உள்ளது. தனியார் பள்ளிகளில் இருக்கும் வசதிகளை அரசு பள்ளிகளிலும் கொண்டு வரவே தத்தெடுத்து இருக்கிறேன். பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது எனது விருப்பம். கடந்த வருடம் 30 பள்ளிகளுக்கு அதை செய்தோம்.

    எத்தனையோ பேர் படித்து நல்ல நிலையில் இருப்பார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு பள்ளியை தத்தெடுத்தால் ஊரையே மாற்றி விடலாம்'' என்றார்.

    ×