50 பள்ளிகளை தத்தெடுத்த நடிகை லட்சுமி மஞ்சு

நான் ஏற்கனவே 30 பள்ளிகளை தத்தெடுத்தேன். இப்போது மேலும் 20 பள்ளிகளை தத்தெடுத்து இருக்கிறேன்.
50 பள்ளிகளை தத்தெடுத்த நடிகை லட்சுமி மஞ்சு
Published on

தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகளான லட்சுமி மஞ்சு தமிழில் கடல், இஞ்சி இடுப்பழகி, காற்றின் மொழி ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

இன்னொரு புறம் சினிமாவைத் தாண்டி சமூகசேவை பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே அரசு பள்ளிகளை தத்தெடுத்து மாணவ, மாணவிகளுக்கு உதவிகளை செய்து வருகிறார்.

தற்போது தெலுங்கானா மாநிலம் ஜோகுலம்பா கத்வால் மாவட்டத்தில் மேலும் 20 பள்ளிகளை தத்தெடுத்து இருக்கிறார். இதுகுறித்து லட்சுமி மஞ்சு கூறும்போது, "நான் ஏற்கனவே 30 பள்ளிகளை தத்தெடுத்தேன். இப்போது மேலும் 20 பள்ளிகளை தத்தெடுத்து இருக்கிறேன்.

மொத்தம் 50 பள்ளிகளை தத்தெடுத்தது மகிழ்ச்சியாக உள்ளது. தனியார் பள்ளிகளில் இருக்கும் வசதிகளை அரசு பள்ளிகளிலும் கொண்டு வரவே தத்தெடுத்து இருக்கிறேன். பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது எனது விருப்பம். கடந்த வருடம் 30 பள்ளிகளுக்கு அதை செய்தோம்.

எத்தனையோ பேர் படித்து நல்ல நிலையில் இருப்பார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு பள்ளியை தத்தெடுத்தால் ஊரையே மாற்றி விடலாம்'' என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com