என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு"

    • மனிஷ் சிசோடியாவை அமலாக்கத்துறை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்தது.
    • மனிஷ் சிசோடியா கடந்த 17 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மனிஷ் சிசோடியாவிற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் மனிஷ் சிசோடியாவை அமலாக்கத்துறை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்தது.

    இதைத் தொடர்ந்து மனிஷ் சிசோடியா சார்பில் தாக்கப்பட்ட செய்யப்பட்ட ஜாமீன் மனுக்கள் கீழமை நீதிமன்றங்களில் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டு வந்தது. இதனால் அவர் கடந்த 17 மாதங்களாக டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில், ஜாமீன் வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மணிஷ் சிசோடியா மேல் முறையீடு செய்தார். இந்த மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர். காவை மற்றும் கே.வி. விஸ்வநாதன் அடங்கிய அமர்வு விசாரணை செய்தது.

    விசாரணையை தொடர்ந்து மனிஷ் சிசோடியாவிற்கு நிபந்தணைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். அதன்படி மணிஷ் சிசோடியா தனது பாஸ்போர்ட்-ஐ ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். மேலும் அமலாக்கத்துறை சார்பில் மணிஷ் சிசோடியா கட்சி அலுவலகம் செல்லக் கூடாது என்று முன்வைத்த வாதம் நிராகரிக்கப்பட்டு உள்ளது.

    • மணீஷ் சிசோடியா கடந்த 17 மாதமாக சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
    • அவரை அமலாக்கத்துறை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்தது.

    புதுடெல்லி:

    மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவை அமலாக்கத்துறை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்தது.

    மணீஷ் சிசோடியா சார்பில் தாக்கப்பட்ட செய்யப்பட்ட ஜாமின் மனுக்கள் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டு வந்தது. இதனால் அவர் கடந்த 17 மாதமாக திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    தனக்கு ஜாமின் வழங்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மணீஷ் சிசோடியா மேல் முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் பி.ஆர். காவே மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது மணீஷ் சிசோடியாவிற்கு சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியது.

    விசாரணையை தொடர்ந்து அவருக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமின் வழங்கினர். மேலும், மணீஷ் சிசோடியா தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

    இந்நிலையில், 17 மாதங்களுக்கு பிறகு திகார் சிறையில் இருந்து இன்று மாலை மணீஷ் சிசோடியா வெளியே வந்தார். அப்போது அங்கு கூடியிருந்த ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

    ×