என் மலர்
நீங்கள் தேடியது "பவ்யா ட்ரிக்கா"
- இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள பன் பட்டர் ஜாம் திரைப்படத்தில் பிக்பாஸ் சீசன் புகழ் ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
- கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத், பவ்யா ட்ரிக்கா நடித்துள்ளனர்.
இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள பன் பட்டர் ஜாம் திரைப்படத்தில் பிக்பாஸ் சீசன் புகழ் ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத், பவ்யா ட்ரிக்கா நடித்துள்ளனர்.
மேலும் சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, மைக்கேல் தங்கதுரை, விஜே பப்பு உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியானது. இதை ரெயின் ஆஃப் ஆரோஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.
படத்தின் தியா தியா பாடலை சில வாரங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இப்பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் ஜூலை 18 ஆம் தேதி வெளியாகிறது.
- பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் முகேன் ராவ்.
- ஜின் படத்தை டி.ஆர் பாலா இயக்கியுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் முகேன் ராவ்.இவர் பாடிய இண்டிபெண்டண்ட் பாடல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் வேலன் , மதில் மேல் காதல் போன்ற படங்களிலும். மை 3 என்ற இணையதொடரில் நடித்தார்.
இதைத்தொடர்ந்து தற்பொழுது ஜின் - தி பெட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை Fairy Tale Pictures and AR Touring Talkies Productions நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. ஜின் படத்தை டி.ஆர் பாலா இயக்கியுள்ளார்.
முகேன் கதாநாயகனாக நடிக்க இவருடன் பாலசரவணன், பவ்யா திரிகா, ராதாரவி, வடிவுகரசி, நிழல்கள் ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர். திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் ஜூன் 30 ஆம் தேதி வெளியாகிறது.
வாழ்க்கையில் நினைத்தது எதவும் நடக்காத கதாநாயகனுக்கு அதிர்ஷ்டத்தை தரும் ஜின் பெட்டி ஒருவர் கொடுக்கிறார். அதன் பிறகு அழகான வாழ்க்கை அமைகிறது ஆனால் அதே ஜின் பெட்டியால் மிகப்பெரிய ஆபத்தில் சிக்கிக் கொள்கிறார் இதற்கு அடுத்து என்ன ஆனது . இதுவே படத்தின் கதைக்களமாகும். படத்தின் இசையை விவேக் - மெர்வின் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் படத்தின் ஸ்னீக் பீக் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ஜின்னை வளர்க்க மூன்று கண்டிஷன்கள் இருக்கிறது என கூறும் காட்சி இடம் பெற்றுள்ளது.
- பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் முகேன் ராவ்.
- ஜின் படத்தை டி.ஆர் பாலா இயக்கியுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் முகேன் ராவ். இவர் பாடிய இண்டிபெண்டண்ட் பாடல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் வேலன் , மதில் மேல் காதல் போன்ற படங்களிலும். மை 3 என்ற இணையதொடரில் நடித்தார்.
இதைத்தொடர்ந்து தற்பொழுது ஜின் - தி பெட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை Fairy Tale Pictures and AR Touring Talkies Productions நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. ஜின் படத்தை டி.ஆர் பாலா இயக்கியுள்ளார்.
முகேன் கதாநாயகனாக நடிக்க இவருடன் பாலசரவணன், பவ்யா திரிகா, ராதாரவி, வடிவுகரசி, நிழல்கள் ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர். திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் ஜூன் 30 ஆம் தேதி வெளியாகிறது.
வாழ்க்கையில் நினைத்தது எதவும் நடக்காத கதாநாயகனுக்கு அதிர்ஷ்டத்தை தரும் ஜின் பெட்டி ஒருவர் கொடுக்கிறார். அதன் பிறகு அழகான வாழ்க்கை அமைகிறது ஆனால் அதே ஜின் பெட்டியால் மிகப்பெரிய ஆபத்தில் சிக்கிக் கொள்கிறார் இதற்கு அடுத்து என்ன ஆனது . இதுவே படத்தின் கதைக்களமாகும். படத்தின் இசையை விவேக் - மெர்வின் இசையமைத்துள்ளார்.
- பிக்பாஸ் சீசன் 5 வின்னரான ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
- படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.
இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள இந்தப்படத்தில் பிக்பாஸ் சீசன் 5 வின்னரான ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத், பவ்யா ட்ரிக்கா நடித்துள்ளனர். மேலும் சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, மைக்கேல் தங்கதுரை, விஜே பப்பு உளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
பாபு ஒளிப்பதிவில், ஜான் ஆப்ரகாம் படத்தொகுப்பில் உருவாகிவரும் இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீட்டு நிகழ்வு சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.
சாதாரணமாக ஒரு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பேப்பரிலும், சோசியல் மீடியாவிலும் வெளியிடுவதுதான் வழக்கம். ஆனால் வழக்கத்துக்கு மாறாக இப்படத்தின்
30 அடி உயரம் கொண்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரசாத் ஸ்டுடியோ வளாகத்தில் உள்ள உயர்ந்த சுவரில் மேலிருந்து கீழாக இறக்கி மீடியா முன்பாக வெளியிட்டது புதுமையாக இருந்தது. அனைவரின் கை தட்டல்கள் உடன் கதாநாயகன் ராஜூ அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் முன்பு தோன்றி பேசி நன்றி தெரிவித்தார்.
இதை தொடர்ந்து நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்வில்
இயக்குனர் ராகவ் மிர்தாத் பேசும்போது,
"கிட்டத்தட்ட 50 நாட்கள் எடுத்துக்கொண்டு கைகளாலேயே வரையப்பட்ட போஸ்டர் தான் இது. வாழ்க்கையில் நிறைய போராட்டம் நடக்கும். எல்லோருடைய மனதிலும் ஒரு போர்க்களம் இருக்கிறது. பல பிரச்சனைகளால் நாம் அன்றாட வாழ்க்கையை அனுபவிக்காமலேயே நாளை பார்த்துக் கொள்வோம் என கடந்து செல்வோம். ஆனால் திடீரென ஒருநாள், நாளை என்பதே இல்லாமல் போய்விடும். அதனால் அந்த கணத்தின் சந்தோஷத்தை அப்போதே அனுபவிக்க வேண்டும் என்பதைத்தான் இந்த போஸ்டர் மூலமாக சொல்ல நினைத்தேன்" என்றார்.
நாயகன் ராஜு பேசும்போது,
"என்னைத் தேடி வரும் ஒவ்வொரு வாய்ப்பும் எனக்கு தேவதை மாறித்தான். அதனால் எந்த தேவதை கை கொடுத்தாலும் அந்த தேவதையின் கையை இறுகப்பிடித்துக் கொண்டு மேலே வந்து விட வேண்டும் என்பது என்னுடைய எண்ணமாக இருந்தது.
ஒரு கட்டத்தில் நானே எனக்காக படம் பண்ணலாம் என்று நினைத்து என்னுடைய கெட்டப்பை மாற்றி என் வீட்டிலேயே என்னை அடையாளம் புரியாத அளவுக்கு ஆளே மாறிப்போனேன். அதன் பிறகு நம்மிடம் ரசிகர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள், நம்மை எப்படி பார்க்க விரும்புகிறார்கள் என்பதை புரிந்து கொண்டு நடித்த படம் தான் இந்த 'பன் பட்டர் ஜாம்'.
அதுபோல எனக்காக கதையை எழுதிய இயக்குனர், இந்த படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் மக்கள் என நான்கு தலைகள் தான் என்னுடைய தலையெழுத்தை தீர்மானிக்க போகிறீர்கள்" என்றார்
ஏனென்றால் நான் உதவி இயக்குனராக வேலை பார்த்ததால் ரியாலிட்டி என்னவென்று எனக்கு தெரியும். எப்போதுமே கதை தான் ஹீரோ. கதை சரியாக இருந்தால் மட்டும்தான் ஒரு நல்ல நடிகன் உருவாக முடியும் என்பதை நான் திடமாக நம்புகிறேன். ஐந்து வருடத்திற்கு முன்பாக எஸ்.ஜே சூர்யாவிற்காக ஒரு கதை எழுதி வைத்திருந்தேன். அதில் நீயே நடி என்று கூறி எனக்கு ஒரு வாய்ப்பு வந்தது. அதை எழுதுவதற்காக மற்ற விஷயங்களில் இருந்து ஒதுங்கி சென்றதால் நாட்கள் போனதே தெரியவில்லை. அதிலேயே கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் ஆகிவிட்டது. அதன் கடைசி பகுதியை எழுதும்போது, நமக்கு யாராவது கேக் போல ஒரு கதையுடன் வந்தால் அழகாக நடித்துவிட்டு போகலாமே என்று நினைத்த சமயத்தில் தான் இந்த படம் என்னை தேடி வந்தது.
ஒரு நடிகனாக வேண்டுமென்றுதான் சென்னைக்கு வந்தேன். வாய்ப்பு கிடைப்பது கஷ்டமாக இருக்கவே, நமக்கான கதையை நாமே எழுதி படத்தை இயக்கிக் கொள்ளலாம் என்று தான் பாக்யராஜ் சாரிடமும் நெல்சனிடமும் உதவி இயக்குனராக பணியாற்றினேன். ஆனால் நடித்து விடலாமே என்று நினைக்கும் அளவிற்கு டைரக்ஷன் பணி கொஞ்சம் கடினமாகவே இருக்கிறது. அதேசமயம் பிக்பாஸ் முடிந்தவுடன் நானே எழுதி, இயக்கி, நடிக்கும் விதமாகத்தான் வாய்ப்பு உருவானது. அதில் நீண்ட காலம் எடுத்துக்கொண்டதும், மக்கள் நம்மை மறந்து விடுவார்கள் என்று தான் இந்த பட வாய்ப்பு வந்ததும் நடிகராக மாறிவிட்டேன். எது எப்போது நடக்குமோ அப்போது நடக்கும் என்று நம்புகிறேன். விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த போது அதன் இயக்குனர் ஜோஷ்வா மூலமாகத்தான் இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






