என் மலர்
நீங்கள் தேடியது "பாரீஸ் விளையாட்டு"
- கடந்த இரு ஒலிம்பிக்கில் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் தொடர்ச்சியாக தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்தார்.
- அதிவேக பெண்மணியாக வலம் வரும் 31 வயதான தாம்சன் ஹெரா பாரீஸ் ஒலிம்பிக்கில் இருந்து விலகியுள்ளார்.
கிங்ஸ்டவுன்:
ஜமைக்காவைச் சேர்ந்த பிரபல ஓட்டப்பந்தய வீராங்கனை எலைன் தாம்சன் ஹெரா, கடந்த இரு ஒலிம்பிக்கில் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் தொடர்ச்சியாக தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்தார். அதிவேக பெண்மணியாக வலம் வரும் 31 வயதான தாம்சன் ஹெரா பாரீஸ் ஒலிம்பிக்கில் இருந்து விலகியுள்ளார்.
பின்னங்காலில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்படும் அவருக்கு தசைநாரில் லேசான கிழிவும் ஏற்பட்டிருக்கிறது. ஒலிம்பிக்கை தவற விடுவது மிகுந்த வேதனை அளித்தாலும், இறுதியில் விளையாட்டை விட உடல்ஆரோக்கியமே முக்கியம் என்று ஹெரா குறிப்பிட்டார்.
- 400 மீட்டர் ஓட்டத்தின் அரைஇறுதி சுற்றில் கிரண் பஹல் 50.92 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடம் பிடித்தார்.
- இந்த பிரிவில் ஒலிம்பிக் தகுதி இலக்கு 50.95 வினாடியாகும்.
பஞ்ச்குலா:
மாநிலங்களுக்கு இடையிலான 63-வது தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி அரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் நேற்று தொடங்கியது.
இதில் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தின் அரைஇறுதி சுற்றில் அரியானாவைச் சேர்ந்த கிரண் பஹல் 50.92 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடம் பிடித்தார். இந்த பிரிவில் ஒலிம்பிக் தகுதி இலக்கு 50.95 வினாடியாகும். இதை அடைந்த விட்ட கிரண் பஹல் பாரீஸ் ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்றுள்ளார்
'ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. எனக்கே ஆச்சரியமாக உள்ளது. இதை விட பெரிய சாதனை எதுவும் கிடையாது' என்று 23 வயதான கிரண் பஹல் நெகிழ்ந்தார்.






