என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிண்டி கவர்னர் மாளிகை"

    • கவர்னர் மாளிகைக்கு சென்று போலீசார் வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்டனர்.
    • கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    சென்னை:

    சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் போன் செய்து பேசினார். அப்போது அவர் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் குண்டு வெடிக்கும் என்று கூறிவிட்டு போனை துண்டித்து விட்டார்.

    இதை தொடர்ந்து கவர்னர் மாளிகைக்கு சென்று போலீசார் வெடிகுண்டு சோதனையில் ஈடு பட்டனர். ஆனால் குண்டு எதுவும் சிக்கவில்லை.

     இதை தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் புரளி என்று தெரிய வந்தது. இதுபற்றி கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது போனில் பேசிய நபர் கள்ளக்குறிச்சியை அடுத்த எல்லரை சூர கோட்டையை சேர்ந்த தேவராஜ் என்பது தெரிய வந்தது. கள்ளக்குறிச்சி போலீசார் தேவராஜை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் அவர் லேசாக மன நலம் பாதிக்கப்பட்டவர் போல காணப்பட்டதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    ×