என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிசிஎஸ்"

    • மும்பை பங்கு சந்தையில் டி.சி.எஸ்-ன் பங்கு 0.73 சதவீதம் குறைந்து ரூ.3,056. ஆனது.
    • தேசிய பங்கு சந்தையில் 0.72 சத வீதம் குறைந்து ரூ.3057 ஆனது.

    வளர்ந்து வரும் ஏ.ஐ. தொழில்நுட்பம் உலகம் முழுக்கவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

    ஏ.ஐ. வரவால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கிலான தொழிலாளர்கள் வேலை இழந்து வருகின்றனர். குறிப்பாக ஐ.டி. நிறுவனங்கள் ஆள்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்தநிலையில் இந்தியாவின் மிகப்பெரிய ஐ.டி. நிறுவனமான டி.சி.எஸ். இந்த ஆண்டு அதன் உலகம் முழுவதிலும் இருந்து பணி புரியும் 12,261 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக 2 நாட்களில் பங்கு சந்தையில் ரூ .28,148 கோடியை அந்நிறுவனம் இழந்துள்ளது.

    நேற்று மும்பை பங்கு சந்தையில் டி.சி.எஸ்-ன் பங்கு 0.73 சதவீதம் குறைந்து ரூ.3,056. ஆனது. தேசிய பங்கு சந்தையில் 0.72 சத வீதம் குறைந்து ரூ.3057 ஆனது.

    இதனால் கடந்த 2 நாட்களில் மட்டும் டி.சி.எஸ். நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.28,148.72 கோடி குறைந்து ரூ.11,05,886.54 கோடியாக உள்ளது.

    • 2024 ஆம் வருடத்தின் முதல் 3 மாதங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 17,483 கோடியை பதிவு செய்துள்ளது.
    • கடந்த வருடத்தை விட இந்தாண்டு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 213.7% வளர்ச்சி அடைந்துள்ளது.

    கடந்த 10 ஆண்டுகளில் முதல்முறையாக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தை விட டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் அதிகரித்துள்ளது.

    2024 ஆம் வருடத்தின் முதல் 3 மாதங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.17,483 கோடியை பதிவு செய்துள்ளது.

    2023 ஆம் வருடத்தின் முதல் 3 மாதங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.5,573.8 கோடியாக இருந்தது. இந்நிலையில், கடந்த வருடத்தை விட இந்தாண்டு அந்நிறுவனத்தின் நிகர லாபம் 213.7% வளர்ச்சி அடைந்துள்ளது.

    அதே சமயம் 2023 ஆம் வருடத்தின் முதல் 3 மாதங்களில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.11,392 கோடியாக இருந்தது. இந்நிலையில், ஒரே வருடத்தின் அந்நிறுவனத்தின் நிகர லாபம் 9.1% வளர்ச்சி அடைந்து இந்தாண்டு ரூ.12,434 கோடியை எட்டியுள்ளது.

    இதன்மூலம், டாடா நிறுவனங்களில் அதிக லாபம் தரும் நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் உருவெடுத்துள்ளது.

    அதே சமயம் வருடத்திற்கான நிகர லாபத்தில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனமே இன்னமும் முன்னிலையில் உள்ளது. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் வருட நிகர லாபம் ரூ.45,908 கோடியாகவும், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வருட நிகர லாபம் ரூ.31,399 கோடியாக உள்ளது.

    • குறிப்பிடத்தக்க பணிகளை மேற்கொண்டு வந்தார்.
    • பதவிக்காலம் மே 19 ஆம் தேதியுடன் நிறைவுபெற்றது.

    டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்.) நிறுவனம் தனது மூத்த இயக்க அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான என்.ஜி. கணபதி சுப்ரமணியம் இன்று (மே 20) முதல் தனது பதிவியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இருக்கிறது. அந்த வகையில், மே 19 ஆம் தேதியுடன் கணபதி சுப்ரமணியத்தின் அலுவல் பணிகளின் கடைசி நாள் ஆகும்.

    இது தொடர்பாக டி.சி.எஸ். சார்பில் வெளியிடப்பட்டு இருக்கும் அறிவிக்கையில், "நிறுவனத்தின் மூத்த இயக்க அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான திரு. என். கணபதி சுப்ரமணியத்தின் பதவிக்காலம் மே 19 ஆம் தேதியுடன் நிறைவுபெற்றது," என குறிப்பிடப்பட்டு உள்ளது.

    கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்பு டி.சி.எஸ். நிறுவனத்தில் இணைந்த என்.ஜி. கணபதி சுப்ரமணியம் 2017, பிப்ரவரி மாதம் டி.சி.எஸ். நிறுவனத்தின் மூத்த இயக்க அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அன்று முதல் டி.சி.எஸ். நிறுவன வளர்ச்சி மற்றும் நிர்வாக பணிகளில் குறிப்பிடத்தக்க பணிகளை மேற்கொண்டு வந்த கணபதி சுப்ரமணியத்தின் பதவிக்காலம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

    கடந்த ஏப்ரல் மாத வாக்கில் டி.சி.எஸ். வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், கணபதி சுப்ரமணியத்திற்கு மாற்று அதிகாரியை நேரடியாக நியமிக்கப்போவதில்லை என்று தெரிவித்து இருந்தது.

    "அவர் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார், இதனால் ஒரு அதிகாரியால் அவருக்கு மாற்றாக அமைந்துவிட முடியாது. எங்களது தலைமை குழுவினர் ஒன்றுகூடி அவர் மேற்கொண்டு வந்த பணிகளை பகிர்ந்து அளிக்க திட்டமிட்டு வருகிறோம். இதனால் புதிதாக தலைமை இயக்க அதிகாரி நியமிக்க விரும்பவில்லை," என்று டி.சி.எஸ். தலைமை செயல் அதிகாரி கே. கீர்த்திவாசன் தெரிவித்து இருக்கிறார். 

    • ஏஐ தொழில்நுட்பம் உலகளவில் பன்மடங்கு வளர்ச்சியடைந்து வருகிறது.
    • ஐஎஸ்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் இடம்பெற்று இருக்கிறது.

    இந்தியாவின் முன்னணி ஐடி சேவை வழங்கும் நிறுவனங்களாக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) மற்றும் இன்ஃபோசிஸ் உள்ளன. எனினும், ஏஐ சார்ந்த திட்டங்களை கையாள்வதில் இரு நிறுவனங்களும் பின்னடைவில் இருப்பதாக இன்ஃபர்மேஷன் சர்வீஸ் குரூப் (ஐஎஸ்ஜி) வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    2024 ஜூன் மாதத்திற்கு முந்தைய 12 மாத காலங்களில் ஏஐ சார்ந்த சுமார் 2250 திட்டங்களில் அக்சென்ச்சர் கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதே காலக்கட்டத்தில் டிசிஎஸ் மற்றும் இன்ஃபோசிஸ் ஆகிய நிறுவனங்கள் முறையே 300 மற்றும் 200 ஏஐ சார்ந்த திட்டங்களை கைப்பற்றி இருக்கின்றன.

    செயற்கை நுண்ணறிவு என்ப்படும் ஏஐ தொழில்நுட்பம் உலகளவில் பன்மடங்கு வளர்ச்சியை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், முன்னணி ஐடி நிறுவனங்கள் இது தொடர்பான திட்டங்களில் எந்தளவுக்கு ஆதிக்கம் செலுத்துகின்றன என்பது தொடர்பாக தகவல்கள் தான் ஐஎஸ்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் இடம்பெற்று இருக்கிறது.

     


    அதன்படி அக்சென்ச்சர் மற்றும் ஐபிஎம் நிறுவனங்கள் கிட்டத்தட்ட 1000 ஏஐ திட்டங்களை முடித்துள்ளது. ஏஐ சார்ந்த திட்டங்களை கையாள்வது தொடர்பாக முன்னணியில் உள்ள ஐந்து நிறுவனங்கள் பட்டியலில் காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் கார்ப் மற்றும் கேப்ஜெமினி எஸ்இ உள்ளிட்டவை முறையே நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களில் உள்ளன.

    புதிய தொழில்நுட்பங்களை முன்கூட்டியே பயன்படுத்த துவங்கியது மற்றும் போட்டியில் அதிகவனம் செலுத்துவது உள்ளிட்டவை தான் அக்சென்ச்சர் மற்றும் ஐபிஎம் நிறுவனங்கள் அதிகளவு ஏஐ திட்டங்களை கைப்பற்றுவதற்கு காரணம் என சந்தை வல்லுநர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

    "ஏஐ சார்ந்த திட்டங்களில் முன்கூட்டியே ஆர்வம் காட்டுவதன் மூலம் அதிக திட்டங்களை கைப்பற்றவோ அல்லது அதிக திட்டங்களில் பணியாற்றவோ முடியும். சர்வதேச நிறுவனங்கள் முன்கூட்டியே இதுதொடர்பான பணிகளில் ஈடுபட துவங்கியதன் விளைவு தான், அவர்கள் இத்தனை திட்டங்களை பெறுவதற்கு முக்கிய காரணம்," என்று கான்ஸ்டெலேஷன் ரிசர்ச் நிறுவனர் ரே வாங் தெரிவித்தார்.

    ×