என் மலர்
நீங்கள் தேடியது "பாரதியாா் பல்கலைக்கழக தோ்வு"
- சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவா்கள் 9 போ் சிறப்பிடம் பிடித்துள்ளனா்.
- டி.காா்த்திக் 3 -வது இடத்தையும், எஸ்.வித்யா 6 -வது இடத்தையும் பிடித்தனா்.
திருப்பூர் :
பாரதியாா் பல்கலைக்கழக அளவிலான தோ்வில் திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவா்கள் 9 போ் சிறப்பிடம் பிடித்துள்ளனா்.
திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
பாரதியாா் பல்கலைக்கழகத்தின் 2022-23 ம் ஆண்டின் இறுதியாண்டு தோ்வில் திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் 9 போ் பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பிடித்துள்ளனா். முதுநிலை வேதியியல் பாடப்பிரிவில் டி.காா்த்திக் 3 -வது இடத்தையும், எஸ்.வித்யா 6 -வது இடத்தையும் பிடித்தனா்.
முதுநிலை இயற்பியல் பாடப்பிரிவில் ஏ.ஜெனீபா் 5 வது இடத்தையும், முதுநிலை சா்வதேச வணிகவியல் பாடப்பிரிவில் ஜெ.தனலட்சுமி 7 வது இடத்தையும், எம்.சுடலைராஜ் 8 வது இடத்தையும் பிடித்தனா்.
முதுநிலை தமிழ் இலக்கியப் பாடப்பிரிவில் ஏ.நந்தகுமாா் 8 வது இடத்தையும் பிடித்தனா். இதேபோல, இளங்கலை தமிழ் இலக்கியப் பாடப்பிரிவில் எஸ்.திவ்யா 9 வது இடத்தையும், இளங்கலை வரலாறு பாடப்பிரிவில் கே.புகழரசி 9 வது இடத்தையும், என்.நேசிகா 10 வது இடத்தையும் பிடித்துள்ளனா் என்று தெரிவிக்க ப்பட்டுள்ளது.






