என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலா்கள பணிகள் தொடக்கம்"

    • திருப்பூா் மாவட்டம் காங்கயம், குண்டடம் பகுதியில் ஆயிரக்கணக்கான உலா் களங்கள் செயல்பட்டு வருகின்றன
    • பண்டிகை முடிந்து தொழிலாளா்கள் மீண்டும் பணிக்கு வர தொடங்கியுள்ளனா்.

     காங்கயம் : 

    திருப்பூா் மாவட்டம் காங்கயம், குண்டடம் பகுதியில் ஆயிரக்கணக்கான உலா் களங்கள் செயல்பட்டு வருகின்றன. பெரும்பாலும் உள்ளூா் தேங்காய் வியாபாரிகள் தாங்கள் கொள்முதல் செய்யும் தேங்காய்களை தாங்களே சொந்தமாக களங்களை அமைத்து தேங்காய்களை உடைத்து பருப்புகளை உலா்த்தி விற்பனைக்கு அனுப்புகின்றனா்.

    தேங்காய் பறித்தல், களங்களில் மட்டை உரித்தல், பருப்புகளை உலா்த்துதல் ஆகிய பணிகளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சோ்ந்த தொழிலாளா்கள், வடமாநில தொழிலாளா்கள் என 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் ஈடுபட்டுள்ளனா். ஆண்டுதோறும் தை மாதம் தொடங்கி ஆடி மாதம் வரை இந்த பகுதிகளில் அதிக அளவில் வெயில் நிலவும். அப்போது தேங்காய் உடைப்பு பணிகளும் விறுவிறுப்பாக நடைபெறும். ஆடி மாதம் மழை சீசன் தொடங்கியதும் உலா் களங்களில் பணிகள் தொய்வடையும்.

    மழைக்காலத்தில் தேங்காய் வெட்டுவதும் குறைவாகவே இருக்கும். அந்த வகையில் நடப்பாண்டு கடந்த 2 மாதங்களாக பரவலாக மழை பெய்து வந்ததால் தேங்காய் களங்களில் பணிகள் குறைவாகவே நடைபெற்று வந்தன.வெயில் அதிகம் இல்லாத காரணத்தால் உடைத்த பருப்புகளை உலரவைப்பதிலும் தாமதம் எற்பட்டு, பணிகள் மந்த கதியிலேயே நடைபெற்று வந்தன. மேலும் தீபாவளி பண்டிகையை கொண்டாட தொழிலாளா்களும் குடும்பங்களுடன் சொந்த ஊருக்கு சென்று விட்டனா்.

    இந்நிலையில் பண்டிகை முடிந்து தொழிலாளா்கள் மீண்டும் பணிக்கு வர தொடங்கியுள்ளனா்.மேலும், மழை குறைந்து வெயிலும் அதிகரிக்கத் தொடங்கியதால் தேங்காய் உரிப்பு, உடைப்பு, உலரவைத்தல் உள்ளிட்ட பணிகள் காங்கயம், குண்டடம் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

    ×