என் மலர்
நீங்கள் தேடியது "தனி விற்பனை மண்டலம்"
- சிந்தாமணி பஸ் நிறுத்தம், தாலுகா அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் 300 சாலையோர வியாபாரிகள் உள்ளனர்.
- சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் கலெக்டரிடம் மனு அளித்திருந்தனர்.
அவிநாசி :
அவிநாசி புதிய பஸ் நிலையம் முதல் பழைய பஸ் நிலையம் வரையிலும், சேவூர் ரோட்டில், சிந்தாமணி பஸ் நிறுத்தம், தாலுகா அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் 300 சாலையோர வியாபாரிகள் உள்ளனர். இவர்களால் வியாபாரம் பாதிக்கப்படுவதாக நிரந்தர கடை உரிமையாளர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி கலெக்டர், நெடுஞ்சாலைத்துறை, பேரூராட்சி நிர்வாகம், போலீசாருக்கு மனு அளித்திருந்தனர்.
இதனால் கடந்த வாரத்தில் நிரந்தரக்கடை உரிமையாளர்கள் மற்றும் சாலையோர வியாபாரிகள், ஏ.ஐ.டி.யு.சி., சங்கத்தினர் ஆகியோரை அழைத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் ஞாயிறன்று மூடப்பட்டுள்ள கடைகள் முன் அரசு அலுவலகங்கள் முன் மற்றும் வாரச்சந்தை ஆகிய இடங்களில் கடைகளை அமைத்து கொள்ள சாலையோர வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதனால் அதிருப்தி அடைந்த சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் கலெக்டரிடம் மனு அளித்திருந்தனர். மனுவை விசாரித்த கலெக்டர் கிறிஸ்துராஜ், சாலையோர வியாபாரிகளுக்கு தனி விற்பனை மண்டலம் அமைத்து கொடுக்கவும், சிறு,குறு கடன் வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்குமாறும் அவிநாசி பேரூராட்சி நிர்வாகத்துக்கு அறிவுறுத்தி உள்ளார்.
இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் இந்துமதி (பொறுப்பு) கூறுகையில், அவிநாசியில் சாலையோர கடைகளை முறைப்படுத்துவதற்கான வழிவகை செய்து தருமாறு கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார். அதனடிப்படையில் நடவடிக்கை எடுப்போம் என்றார்.






