என் மலர்
நீங்கள் தேடியது "தேவார திருமுறை நிகழ்ச்சி"
- தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் சார்பில் ஓதுவார் தேவார திருமுறை நிகழ்ச்சி நடந்தது.
- 20-க்கும் மேற்பட்ட ஓதுவார்கள் மற்றும் பக்கவாத்திய கலைஞர்களுடன் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர்:
இந்திய அரசு கலாச்சாரத்துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கும் தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையம், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் அரண்மனை தேவஸ்தானம் இணைந்து ஓதுவார் தேவார திருமுறை நிகழ்ச்சி மேலவீதி கொங்கனேஸ்வரர் கோயிலில் நடைபெற்றது.
தென்னகப் பண்பாட்டு மைய இயக்குநர் கோபால கிருஷணன் தலைமை வகித்து நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார்.
முன்னதாக தென்னகப் பண் பாட்டு மைய நிர்வாக அலுவலர் சீனிவாசன் வரவேற்றார்.
அரண்மனை தேவஸ்தானம் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் தொடக்கமாக சிவகங்கை பூங்காவிலிருந்து ஓதுவார்கள் சிவ வாத்தியங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு மேல வீதி கொங்கனேஸ்வரர் கோயில் வந்தடைந்தனர்.
பின்னர் கரந்தை தமிழ்ச்சங்க மாணவர்களின் சிவதாண்டவ நிகழ்ச்சியும், இதனைத் தொடர்ந்து சுமார் 20-க்கும் மேற்பட்ட ஓதுவார்கள் மற்றும் பக்கவாத்திய கலைஞர்களுடன் தேவார திருமுறை நிகழ்ச்சி நடை பெற்றது.
நிகழ்ச்சியை பொது மக்கள் திரளாக வருகை தந்து பார்த்து ரசித்தனர்.
தென்னகப் பண்பாட்டு மைய அலுவலர் மாரியப்பன் நன்றி கூறினார்.






