என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காபி கொட்டை அறுவடை"

    • வத்தல்மலையில் காபி கொட்டை அறுவடை தொடங்கியது.
    • மலைவாழ் மக்களுக்கு காபி சாகுபடி மூலம் அதிக வேலைவாய்ப்பு கிடைக்கும்.

    தருமபுரி அடுத்த வத்தல்மலை கடல் மட்டத்தில் இருந்து 3500 மீட்டர் உயரத்தில் உள்ளது. வத்தல்மலை மற்றும் அதனை சுற்றியுள்ள சின்னாங்காடு, ஒன்றியகாடு, பால்சிலம்பு, பெரியூர், குழியனூர், நாயக்கனூர், கொட்டாங்காடு உள்ளிட்ட 7 க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் இந்த மலையில் அமைந்துள்ளது.

    ஆண்டு முழுவதும் இந்த மலைக்கிராமங்களில் குளுமையான சீதோசன நிலை நிலவி வருவதால் மலைப்பயிர்களான காபி, மிளகு, கடுகு, ஆரஞ்சு, பலா உள்ளிட்ட மலைப்பயிர்களை விவசாயிகள் ஆர்வத்துடன் சாகுபடி செய்து வருகின்றனர். இந்த மலை கிராமங்களில் ஆண்டு தோறும் சுமார் 300 ஏக்கருக்கும் மேல் காபி பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. இந்தாண்டு சாகுபடி செய்யப்பட்ட காபி கொட்டைகளை அறு வடை செய்யும் சீசன் தற்போது துவங்கி உள்ளதால் அங்குள்ள மலைகிராம மக்கள் காபி அறுவடை செய்யும் பணியில் மும்மரமாக ஈடுப்பட்டுள்ளனர்.

    இப்பகுதியில் சாகுபடி செய்யபட்டுள்ள காபி கொட்டைகளை தருமபுரி மாவட்டத்தில் விற்பனை செய்ய போதிய வசதிகள் இல்லாமல் உள்ளது. இதனால் சேலம் போன்ற பகுதிகளில் உள்ள விற்பனை நிலைங்களுக்கு இடைத்தரகர்கள் மூலம் விற்பனை செய்கின்றனர். மேலும் மலைக்கிராமங்களுக்கு வரும் இடைத்தரகர்கள் மூலம் குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் அவல நிலை உள்ளது.

    இதனால் இப்பகுதிகளில் காபி சாகுபடி செய்யப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காமல் பெரும் இழப்பு ஏற்படுகிறது. வத்தல்மலையில் உள்ள மலைவாழ் விவசாயிகளின் பிரதான தொழிலாக உள்ள காபி சாகுபடி மேலும் அதிக பரப்பளவில் சாகுபடி செய்ய அரசு உரிய மானியம் வழங்கினால் இப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்களுக்கு காபி சாகுபடி மூலம் அதிக வேலைவாய்ப்பு கிடைக்கும். இடைத்தரகர்கள் இல்லாமல் இப்பகுதிகளிலியே காபி கொட்டை கொள்முதல் மையம் அமைத்து உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைவாழ் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×