என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹாரன்கள் பறிமுதல்"

    • வாகனங்களில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஹாரன்கள் பயன்படுத்த ப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
    • அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்ட துடன் மேலும் சம்மந்தப்பட்ட டிரைவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள நிலக்கோட்டை, விளாம்பட்டி, அணை ப்பட்டி, வத்தலக்குண்டு, விருவீடு, பட்டிவீரன்பட்டி பகுதியில் அரசு, தனியார் பஸ்கள், வேன், லாரி உள்ளிட்ட வாகனங்களில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஹாரன்கள் பயன்படுத்த ப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

    இதனையடுத்து ஆர்.டி.ஓ. சுரேஷ் உத்தரவின் பேரில் மோட்டார் வாகன ஆய்வாளர் ஜோஸ்வின், போக்குவரத்து ஆய்வாளர் ஜெய்சிங் மற்றும் போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதில் பஸ், வேன், லாரி உள்ளிட்ட வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் பறிமுதல் செய்யப்ப ட்டது. மேலும் சம்மந்தப்பட்ட டிரைவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் மீண்டும் இது போன்று ஹாரன்கள் பயன்படுத்தி னால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    ×