என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சங்கு நாராயண சஞ்சீவினி"

    • பசி எடுக்கும் போது நாலைந்து இலைகளை சாப்பிட்டால் போதும் பசி எடுக்காது.
    • பாபநாசம், பொதிகை மலையில் அதிக அளவில் காணப்படுகிறது.

    பல நூற்றாண்டுகளுக்கு முன்பு காடுகளில் கண்டறியப்பட்ட அரிதான தாவர வகையினங்களில் ஒன்று இந்த `சங்கு நாராயண சஞ்சீவினி' மலைப்பிரதேசங்களில் அரிதாகவே காணப்படுகிறது.

    காடுகளில் சித்தர்கள் உலா வந்த காலங்களில் பூஜைகளுக்கும், பசியை போக்குவதற்கும் சாப்பிட்டு வந்த காய்கள், பழங்கள், மூலிகை தாவரங்களின் வரிசையில் இதுவும் ஒன்று. ஆதிகாலத்தில் பழங்குடி மக்கள் வேட்டைக்கு செல்லும்போது களைப்பாற உதவியது இந்த சங்கு நாராயண சஞ்சீவினி இலைகள்.

    பசி எடுக்கும் போது நாலைந்து இலைகளை சாப்பிட்டால் போதும் பசி எடுக்காது. பழங்குடி இன மக்கள் தங்கள் பசியை போக்கவும், காயங்களுக்கு மருந்தாகவும் இதனை பயன்படுத்தினர். பாபநாசம், பொதிகை மலையில் அதிக அளவில் காணப்படுகிறது. இந்த சங்கு நாராயண சஞ்சீவினி மூலிகை ரத்த சோகையை குணப்படுத்தும். ரத்த சுத்திகரிப்பு, உடல்குளிச்சிக்கும் பயன்படுகிறது. தினமும் 3 இலைகளை சாப்பிட்டால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். ரத்த ஓட்டம் சீராகும்.

    ×