என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவர்னர் பேசியதில் தவறில்ைல"

    • ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறிவிட்டு, தற்போது 50 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கி வருகின்றனர்.
    • இவர்கள் கையெழுத்து வாங்கும் கோப்புகளை யாருக்கு அனுப்புவார்கள். மக்களை ஏமாற்ற இதுபோல ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எரியோட்டில் அ.தி.மு.க. 52ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் எரியோடு பேரூர் செயலாளர் அறிவாளி தலைமையில் நடைபெற்றது.

    மாநில பாசறை செயலாளர் பரமசிவம், முன்னாள் எம்.எல்.ஏ. பழனிச்சாமி, தலைமைக் கழக பேச்சாளர் அம்புஜம் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் அ.தி.மு.க. பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசியதாவது,

    தி.மு.க. 100 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறிவிட்டு, தற்போது 50 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கி வருகின்றனர். இவர்கள் கையெழுத்து வாங்கும் கோப்புகளை யாருக்கு அனுப்புவார்கள். மக்களை ஏமாற்ற இதுபோல ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அ.தி.மு.க. ஆட்சியில் ஒரே ஆண்டில் தமிழகத்திற்கு 11 மருத்துவக்கல்லூரிகள் கொண்டு வரப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்ட திட்டங்களுக்கு முதல்-அமைச்சரும், அவரது மகனும் திறப்பு விழா நடத்தி வருகின்றனர். தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகன் வீட்டில் சோதனை நடத்தியதில் ரூ.1300 கோடி சொத்து ஆவணங்கள் கைப்பற்றப் பட்டன. இலாகா இல்லாத அமைச்சருக்கு இன்னும் ஜாமின் கிடைக்கவில்லை.

    ஆரியம், திராவிடம் பற்றி கவர்னர் பேசியதில் எந்த தவறும் இல்லை. தற்போது கவர்னர் வீட்டு முன்பே பெட்ரோல் குண்டு வீசும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது. வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றிபெற்று பிரதமரை தேர்ந்தெடுக்கும் சக்தியாக இருப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் குஜிலிய ம்பாறை ஒன்றிய செயலாளர் மலர்வண்ணன், மேற்கு ஒன்றிய செயலாளர் பெருமாள், வடமதுரை ஒன்றிய செயலாளர் லட்சுமணன், தண்டாயுதம், வடமதுரை நகர செயலாளர் பாலசுப்பிரமணி, பாளையம் பேரூர் செயலாளர் மணிமாறன், தகவல் தொழில்நுட்ப செயலாளர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×