என் மலர்
நீங்கள் தேடியது "குறைந்த அளவு பஸ்கள் இயக்கம்"
- இந்த வழித்தடத்தில் பழனிக்கு செல்வதற்கும், பழனியில் இருந்து கொடைக்கானல் வருவதற்கும் குறித்த நேரத்தில் மட்டுமே பஸ்கள் இயக்கப்படுவதால் பொதுமக்களும், வியாபாரி களும் பல்வேறு நிலைகளில் பாதிப்படைந்து வரு கின்றனர்.
- வேறு வழியில்லாமல் தனியார் வாகனங்களை நாடும் நிலைக்கு அனைவரும் தள்ளப்பட்டு வருகின்றனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் இருந்து திண்டுக்கல், மதுரை, வத்தலக்குண்டு போன்ற ஊர்களுக்கு செல்ல அடிக்கடி பஸ் வசதி உள்ள நிலையில் கொடைக்கா னலில் இருந்து பழனிக்கும், பழனியில் இருந்து கொடை க்கானல் வருவதற்கும் குறித்த நேரத்தில் மட்டுமே பஸ்கள் உள்ளது.
கொடைக்கானலில் இருந்து திண்டுக்கல் 100 கி.மீ. தூரமும், கொடை க்கானலில் இருந்து மதுரை செல்வதற்கு 123 கி.மீ. தூரமாகவும் உள்ளது. கொடைக்கானலில் இருந்து பழனி செல்வதற்கு 64 கி.மீ. தூரம் மட்டுமே உள்ளது.ஆனால் குறைவான தூரத்தில் உள்ள இந்த வழித்தடத்தில் பழனிக்கு செல்வதற்கும், பழனியில் இருந்து கொடைக்கானல் வருவதற்கும் குறித்த நேரத்தில் மட்டுமே பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் பொதுமக்களும், வியாபாரி களும் பல்வேறு நிலைகளில் பாதிப்படைந்து வரு கின்றனர்.
அவசர தேவைகளுக்கும், வியாபாரத் தேவை களுக்காகவும் பழனியில் நடைபெறும் திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க செல்வதற்கும் குறித்த நேரத்தில் மட்டுமே பஸ்கள் உள்ளதால் பொது மக்களும், வியாபாரிகளும் தனியார் வாகனங்களை நாடிச் செல்லும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். பழனியில் இருந்து கொடைக்கானல் வருவதற்கு மதியம் 2.15 மணிக்குப் பிறகு மாலை 6 மணிக்குத்தான் கடைசிப் பஸ் உள்ளது. இடைப்பட்ட நேரத்தில் பழனிக்கு சென்று திரும்புபவர்கள் மாலை 6 மணி வரை காத்திருக்கும் நிலை உள்ளது.இதனால் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
மேலும் வியாபாரிகள் தங்கள் வியாபார தேவைக்கு வாங்கிய பொருட்களை இடைப்பட்ட 4 மணி நேரம் பஸ் நிலையத்திலேயே வைத்து பத்திரப்படுத்துவ திலும் சிரமம் ஏற்படுகிறது. இதேபோல் பொதுமக்க ளுக்கும் அதே நிலை தான் ஏற்படுகிறது. வேறு வழியில்லாமல் தனியார் வாகனங்களை நாடும் நிலைக்கு அனைவரும் தள்ளப்பட்டு வருகின்றனர்.
இதனால் பொதுமக்கள் நலம் கருதி 2 மணிக்கும் 6 மணிக்கும் இடையே அரசு பஸ் ஒன்றை இயக்க வேண்டும். மேலும் மாற்றுச்சாலை திட்டத்தை அமல்படுத்தியும், பழனியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டத்தை யும் உருவாக்கினால் மட்டுமே கொடைக்கானல் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் இந்த பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என்றும் தெரி விக்கின்றனர். வாகனப் பதிவு முக்கிய ஆவணங்களை சரி பார்க்கும் நிலை போன்ற காரணங்களுக்காக 100 கி.மீ.க்கு மேல் பயணித்து அல்லல் படும் சூழல் உள்ளது என்றும், தமிழக அரசு விரைவில் பழனியை தலைமையிடமாகக் கொண்ட மாவட்டத்தை உருவாக்க விரைவான நட வடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.
கோவில் நகரான பழனி, சுற்றுலா நகரான கொடைக்கானல் ஆகிய 2 நகரங்களுக்கும் இடையே போக்குவரத்து சீராக இருந்தால் வர்த்தகம் பெருகுவதுடன் அதிக வருவாய் ஈட்டவும் வியா பாரிகளுக்கு துணையாக இருககும் என்றும் தெரிவித்துள்ளனர்.






