என் மலர்
நீங்கள் தேடியது "காங்கிரஸ் போட்டியிட விருப்பம்"
- திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் வட்டார நகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் நடந்தது.
- கூட்டத்தில் தேர்தலை எதிர்கொள்வதற்கு பூத் கமிட்டி அமைப்பது, வரும் கூட்டுறவு தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் போட்டியிடுவது உள்ளிட்ட ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.
கொடைக்கானல்:
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் வட்டார நகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் நடந்தது. கூட்டத்திற்கு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் அப்துல் கனி ராஜா தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் தேர்தலை எதிர்கொள்வதற்கு பூத் கமிட்டி அமைப்பது, எவ்வாறு வழிநடத்துவது, எந்தெந்த பகுதியில் பூத் கமிட்டியினர் எவ்வாறு பணி செய்வது, வரும் கூட்டுறவு தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் போட்டியிடுவது உள்ளிட்ட ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் எம்.பி தேர்தலில் திண்டுக்கல் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்றும் ஆலோசனை செய்யப்பட்டது. மாவட்ட நிர்வாகிகள் முருகானந்தம், பழனியப்பன், ராஜ்கபூர், பாலு, முகமது யாசின், அப்பாஸ், முபாரக், தனலட்சுமி, ஹைருல்லா, அரபு முகமது, ராஜாஜி, காமாட்சி, உள்ளிட்ட திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் முழுவதும் இருந்தும் நூற்றுக்கும் அதிகமாேனார் கலந்து கொண்டனர்.






