என் மலர்
நீங்கள் தேடியது "2-வது ரோப்கார் திட்டம் ரத்து?"
- பக்தர்களின் சிரமத்தை போக்க 2-வது ரோப்கார் அமைக்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என தமிழக அரசு தெரி வித்தது.
- ரூ.30 கோடி கூடுதலாக உள்ளது எனக்கூறி 2-வது ரோப்கார் திட்டம் ரத்து செய்யப்பட உள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழனி:
பழனி கோவிலுக்கு வரும் பக்தர்கள் விரைவாக வும், எவ்வித சிரமம் இன்றியும் மலைக்கோவி லுக்கு செல்ல ரோப்கார் மற்றும் மின் இழுவை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. 50 சதவீதத்துக்கு மேல் பக்தர்கள் இதனையே பயன்படுத்தி மலைக்கோவி லுக்கு சென்று வருகின்றனர்.
பண்டிகை நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் அந்த சமயங்களில் கூட்டம் அலைமோதி வரும். எனவே பக்தர்களின் சிரமத்தை போக்க 2-வது ரோப்கார் அமைக்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என தமிழக அரசு தெரி வித்தது.
அதன்படி கிழக்கு பகுதியில் 2-வது ரோப்கார் நிலையம் அமைக்கப்பட்டு அதற்கான அலுவலகமும் திறக்கப்பட்டது. இந்த பணிக்காக வெளிநாட்டு நிறுவனம் சார்பில் டெண்டர் விடப்பட்ட நிலையில் ரூ.73 கோடிக்கு பணி முடிக்கப்படும் என தெரிவித்தது. ஆனால் ரூ.30 கோடி கூடுதலாக உள்ளது எனக்கூறி 2-வது ரோப்கார் திட்டம் ரத்து செய்யப்பட உள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 2-ம் ரோப்கார் திட்டப்பணிகள் கொரோனா காலக்கட்ட ங்களில் தாமதப்படுத்த ப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும் என எதிர்பார்த்த நிலையில் தற்போது டெண்டர் ரத்து செய்யப்ப ட்டுள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.






