என் மலர்
நீங்கள் தேடியது "துணை இயக்குனர் திடீர் ஆய்வு"
- தருமபுரி உழவர் சந்தையில் வேளாண் துணை இயக்குநர் ஆய்வு மேற்கொண்டார்.
- சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.
தருமபுரி உழவர் சந்தைக்கு தினமும் 5000-க்கும் மேற்பட்ட பொதுமக்களும், 100-க்கும் மேற்பட்ட விவசாயத்தில் வந்து செல்கின்றனர்.
இந்த உழவர் சந்தையில் பொதுமக்களின் செல்போன்கள் தொடர்ந்து திருட்டுப் போய் வந்தது.
இதனால் உழவர் சந்தை வளாகத்தில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். கழிப்பறை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் வேளாண் விற்பனை வணிகத்துறை துணை இயக்குனர் பாலசுப்பிரமணியன் தருமபுரி உழவர் சந்தையில் நேற்று மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பொதுமக்களின் வசதிக்காக அமைக் கப்பட்டுள்ள சுத்திகரிக்கப் பட்ட குடிநீர் நிலையம், கழிப்பறைகள் மற்றும் உழவர் சந்தையில் உள்ள கடைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விவசாயிகள் வைத்திருக்கும் கம்ப்யூட்டர் தராசை ஆய்வு செய்த அவர் மாலை நேரத்தில் விற்பனை செய்யப்படும் மதிப்புக் கூட்டப்பட்ட சிறுதானிய உணவு வகைகளையும் பார்வையிட்டார்.
மேலும் மாலை நேரத்தில் விற்பனை செய்யப்படும் காய்கறிகள் தரமானதாக உள்ளதா? என்பதையும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் நிர்வாக அலு வலகத்தில் பதிவேடுகளை பார்வையிட்ட அவர் தருமபுரி உழவர் சந்தை யில் செல்போன் திருட்டு உள்ளிட்ட அசம்பாவிதங்களை கட்டுப்படுத்த சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது உழவர் சந்தை நிர்வாக அலுவலர் இளங்கோவன், உதவி நிர்வாக அலுவலர் மூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.






