என் மலர்
நீங்கள் தேடியது "விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்"
- 2023-24 ஆம் ஆண்டில் தமிழகத்தில், தேனி மாவட்ட த்தில் சிறப்பு பருவமாக நெற்பயிருக்கும், ராபி பருவ பயிர் மக்கா ச்சோளத்திற்கும் பிரதம மந்திரி பயிர் கா ப்பீட்டுத் திட்டம் செயல்படு த்தப்பட உள்ளது.
- இந்த திட்டத்தின் கீழ் கடன் பெறும் விவசாயிகள், அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில், விருப்பத்தின் அடிப்படை யில் பதிவு செய்யப்படுவர்.
தேனி:
தேனி மாவட்டத்தில், சம்பா நெற்பயிர் மற்றும் ராபி பருவ மக்காச்சோளம் சாகுபடி செய்யும் விவசாயிகள் பிரதம மந்திரியின் புதுப்பிக்க ப்பட்ட பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெற வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஷஜீவனா கேட்டு க்கொண்டுள்ளார்.
பிரதம மந்திரியின் புதுப்பிக்கப்பட்ட பயிர் காப்பீட்டுத் திட்டம், விவசாயிகளுக்கு இயற்கை பேரிடர்களால் எதிர்பா ராமல் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில் நுட்ப ங்களை கடை பிடிப்பதை ஊக்குவிப்பதற்காகவும் தொடர்ந்து செயல்ப டுத்தப்பட்டு வருகிறது. 2023-24 ஆம் ஆண்டில் தமிழகத்தில், தேனி மாவட்ட த்தில் சிறப்பு பருவமாக நெற்பயிருக்கும், ராபி பருவ பயிர் மக்கா ச்சோளத்திற்கும் பிரதம மந்திரி பயிர் கா ப்பீட்டுத் திட்டம் செயல்படு த்தப்பட உள்ளது.
இதன்படி நடப்பு ஆண்டில் தேனி மாவட்ட த்தில் சம்பா பருவத்தில் நெல் பயிருக்கு 14 பிர்க்காக்கள் மற்றும் மக்காச்சோளப் பயிருக்கு 7 பிர்க்காக்கள் கீழ் வரும் அனைத்து வருவாய் கிராமங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கடன் பெறும் விவசாயிகள், அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில், விருப்பத்தின் அடிப்படை யில் பதிவு செய்யப்படுவர். கடன் பெறா விவசாயிகள் கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவும், பொது சேவை மையங்கள் மூலமாகவும், விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு சம்பா பருவத்தில் நெற்பயிரிடும் விவசாயிகள் இந்த திட்டத்தில் சேர கடைசி நாள் நவம்பர் 15-ந் தேதி மற்றும் மக்காச்சோள பயிருக்கு சேர கடைசி நாள் டிசம்பர் 30-ந் தேதி ஆகும்.
நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.528.75 மற்றும் மக்காச்சோளப் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.429 பிரிமீயமாக செலுத்த வேண்டும். விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்ப த்துடன் பதிவு கட்டணம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அடையாள அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து காப்பீட்டுத் தொகையை செலுத்திய பின்னர் அதற்கான ரசீதை பெற்றுக் கொள்ளலாம்.
இத்திட்டம் தொடர்பான மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள வேளா ண்மை விரிவாக்க மையத்தி ல் உள்ள அலுவலர்களை அணுகி தெரிந்து கொ ள்ள லாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்து ள்ளார்.






