என் மலர்
நீங்கள் தேடியது "வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா"
- நடுநிலைப்பள்ளி வளாகத்தில் கூடுதல் இரண்டு வகுப்பறை கட்டிடம் புதிதாக கட்டப்பட்டது.
- ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
மங்கலம் :
திருப்பூர் மாவட்டம்,மங்கலம் ஊராட்சி-அக்ரஹாரப்புதூர் பகுதியில் குழந்தைகள் நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் சார்பில் ரூ.30 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் கூடுதல் இரண்டு வகுப்பறை கட்டிடம் புதிதாக கட்டப்பட்டது. இந்த வகுப்பறைகள் கட்டிடத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
பின்னர் புதிய இரண்டு வகுப்பறைகள் கட்டிடத்தை மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து குத்து விளக்கு ஏற்றப்பட்டது.பள்ளி மாணவ, மாணவிகள் , பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மங்கலம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தாஹாநசீர், திருப்பூர் ஒன்றிய குழு உறுப்பினர் ஜானகிஎபிசியண்ட்மணி, திருப்பூர் வட்டார ஆணையாளர் வேலுச்சாமி, உதவி பொறியாளர் கற்பகம், மங்கலம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் முகமது இத்ரீஸ், மசூதாபேகம், அர்ஜூனன், தி.மு.க. திருப்பூர் தெற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணக்குமார், எஸ்.டி.பி.ஐ.கட்சியை சேர்ந்த அபுதாஹிர், பள்ளி தலைமை ஆசிரியர் உமாராணி, மங்கலம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், மங்கலம் ஊராட்சி செயலாளர் , பள்ளியின் ஆசிரியர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






