என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காலநிலை மாற்ற இயக்க குழு கூட்டம்"

    • மாவட்ட அளவிலான காலநிலை மாற்ற இயக்க குழு கூட்டம் நடைபெற்றது.
    • 2023-24 நிதியாண்டில் செயல்படுத்தக்கூடிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    திருப்பூர் : 

    திருப்பூர் மாவட்ட அளவிலான காலநிலை மாற்ற இயக்க குழு கூட்டம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது:-

    திருப்பூர் மாவட்ட அளவிலான காலநிலை மாற்ற இயக்க குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூட்ட அழைப்பாளர் மற்றும் மாவட்ட காலநிலை அலுவலரான மாவட்ட வன அலுவலர் மற்றும் ஏனைய உறுப்பினர்களான மாவட்ட அளவிலான அலுவலர்கள் கலந்து கொண்டு 2023-24 நிதியாண்டில் செயல்படுத்தக்கூடிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    இக்கூட்டத்தில் மாவட்டத்தில் மரம் நடுதல், மரகத பூஞ்சோலைகள் அமைத்தல், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்தல், மீண்டும் மஞ்சப்பை திட்டம் ஆகியவற்றை செயல்படுத்துவது மற்றும் செயல் திட்டம் தயாரித்தல் குறித்து விவாதிக்கப்பட்டது.

    மேலும் 2024 முதல் 2029 வரையிலான ஐந்தாண்டுகளுக்கு காலநிலை மாற்ற பாதிப்புகளை தணித்தல் மற்றும் அதற்கேற்றவாறு தகவமைத்துக் கொள்ள செயல்திட்டங்களை உருவாக்குதல் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

    இக்கூட்டத்தில், மாவட்ட வன அலுவலர் தேவந்திரகுமார் மீனா , மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் , திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாரயணன் , மாநகர துணை காவல்ஆணையர் (வடக்கு) அபிஷேக் குப்தா , மாநகர துணை காவல்ஆணையர் (தெற்கு) வனிதா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) விஜயராஜ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×