என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவிகள் பயிற்சி"

    • கிராமத்தின் வரைபடத்தை தத்ரூபமாக வரைந்து காட்டினர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை அடுத்த பவித்திரம் கிராமத்தில் வேலூர் விஐடி பல்கலைக்கழக வேளாண் மாணவிகள் கிராமப்புற வேளாண் பயிற்சி பெற்றனர்.

    வேலூர் விஐடி பல்கலைக்கழக வேளாண் துறை மாணவிகள் ச.சந்திர ரூபினி, வெ.சாருமதி, நி.ரேச்சல், ஜெ.லட்சுமி சுப்ரியா ஆகியோர் திருவண்ணாமலை மாவட்டம் பவித்திரம் கிராமத்தில் கிராம மக்களுடன் இணைந்து 3 மாத கால கிராமப்புற வேளாண் பயிற்சி பெற்றனர்.

    மாணவிகள் முக்கிய விவசாய பயிற்களின் விதைப்பு முறை, விவசாய மக்களின் தினசரி வாழ்க்கை முறை, கிராமத்தின் வரைபடம் உள்ளிட்டவைகளை தரையில் தத்ரூபமாக வரைந்து காட்டினர்.

    இதில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வேளாண் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×