என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெரிய வெற்றி"

    • உலக புகழ் பெற்ற அப்பல்லோ சர்க்கஸ் கடந்த 4-ந்தேதி முதல் தொடங்கி, அரங்கம் நிறைந்த காட்சிகளாக நடைபெற்று வருகிறது.
    • குழந்தைகளை குதூகலிக்க செய்யும் கோமாளிகளின் அட்டகாசம் சிரிப்பை வர வைக்கிறது.

    பெருமாநல்லூர்:

    திருப்பூர் மாநகர் பெருமாநல்லூர் சாலை, பூலுவபட்டி பிரிவு அருகில் உலக புகழ் பெற்ற அப்பல்லோ சர்க்கஸ் கடந்த 4-ந்தேதி முதல் தொடங்கி, அரங்கம் நிறைந்த காட்சிகளாக நடைபெற்று வருகிறது. மிகச்சிறந்த பொழுது போக்கு நிகழ்ச்சியாகவும், சர்க்கஸ் கலைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கும் நிகழ்ச்சியாகவும் நடந்து வருகிறது. தினமும் மதியம் 1 மணி, மாலை 4 மணி, இரவு 7 மணி என 3 காட்சிகளாக நடந்து வருகிறது.

    ஒவ்வொரு காட்சிக்கும் 25-க்கும் ேமற்பட்ட சாகச நிகழ்ச்சிகளை சர்க்கஸ் கலைஞர்கள் பொதுமக்கள் மத்தியில் மிகவும் நேர்த்தியாகவும், அழகாகவும் செய்து காட்டுகின்றனர். அந்தரத்தில் தொங்கி கொண்டு சர்க்கஸ் கலைஞர்கள் அசத்தும் சாகசங்கள் பார்வையாளர்களை பரவசம் அடைய வைக்கிறது. வருகிற 2-ந்தேதி சர்க்கஸ் காட்சி நிறைவு பெறுகிறது. சர்க்கசில் வன விலங்குகள், செல்லப்பிராணிகள் என்று உயிரினங்கள் பயன்படுத்துவதற்கு தடை இருக்கும் காரணத்தால், முழுக்க முழுக்க சர்க்கஸ் கலைஞர்களின் திறமையை மட்டுமே வைத்து அப்பல்லோ சர்க்கஸ் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. குழந்தைகளை குதூகலிக்க செய்யும் கோமாளிகளின் அட்டகாசம் சிரிப்பை வர வைக்கிறது. தற்போது பள்ளி காலாண்டு விடுமுறையை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு கட்டண சலுகையும் வழங்கப்படுகிறது. இதனால் மாணவ-மாணவிகள் அதிக அளவில் அழைத்து வரப்படுகிறார்கள்.

    அந்தரத்தில் சர்க்கஸ் கலைஞர்கள் பறந்து பறந்து செய்யும் பார் விளையாட்டு சாகச காட்சிகள், நீண்ட சேலையை தொங்க விட்டு பெண் கலைஞர் ஒருவரும், ஆண்-பெண் ஜோடி கலைஞர்களும் செய்யும் சாகசங்கள் மனதை மயக்குவதாக உள்ளது. மணிப்பூர், நாகலாந்து மாநில கலைஞர்கள் ஈட்டி முனையில் நெஞ்சு, முதுகு வைத்து செய்யும் சாகசங்கள் மயிர்கூச்செரிய செய்கிறது. அவர்களின் ஜிம்னாஸ்டிக் விளையாட்டுகள், நாற்காலி சண்டை விளையாட்டுகள் பார்வையாளர்களை உற்சாகப்படுத்துகிறது. வழக்கமான சைக்கிள் சாகசம், உலக உருண்டை கூண்டுக்குள் லாவகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டும் வீரர்களின் சாகசம், துப்பாக்கி சுடும் நேர்த்தி என்று காட்சிக்கு காட்சி பார்வையாளர்களை குதூகலப்படுத்துகிறது.

    இதுபோல் பல விதவிதமான சர்க்கஸ் காட்சிகள் பார்வையாளர்களை, கிட்டத்தட்ட 3 மணி நேரம் எந்தவித கவலையும் இன்றி உற்சாகப்படுத்துகிறது. 20 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த அப்பல்லோ சர்க்கஸ் வருகிற 2-ந்தேதி நிறைவு ெபறுகிறது,

    மேற்கண்ட தகவலை சர்க்கஸ் மேலாளர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

    ×