என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "salem district:மனைவியின் கள்ளக்காதலன் சிக்கினார் Wife’s cheating lover caught"

    • கணவன்-மனைவிக்கிடையே தகராறு
    • தொடர்ந்து இந்த கொலை சம்பவம் குறித்து ஜோதியிடம் போலீசார் விசாரணை

    சேலம்

    சேலம் நெத்திமேடு மணிய னூரை சேர்ந்தவர் செந்தில்முரு கன் (46), லாரி தொழிலாளி. இவருக்கும் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள சென்னகிரியை சேர்ந்த ஜோதி (36 )என்ப வருக்கும் கடந்த 18 ஆண்டு களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

    பிரிந்து வாழ்ந்த தம்பதி :கணவன்-மனைவிக்கி டையே தகராறு ஏற்பட்ட தால் கடந்த 5 ஆண்டுகளாக கணவரை பிரிந்து ஜோதி சென்னகிரியில் தனியாக வீடு வாடகைக்கு வீடு எடுத்து மகன், மகள்களுடன் வசித்து வருகிறார். செந்தில்முரு கன் அவ்வப்போது மனைவியை பார்க்க வந்து செல்வார்.

    பிணமாக கிடந்தார் :வழக்கம் போல நேற்று முன்தினம் சென்னகிரி யில் உள்ள மனைவி வீட்டிற்கு செந்தில்முருகன் வந்தார். பின்னர் வீட்டு வரண்டாவில் கயிற்று கட்டி லில் படுத்து தூங்கினார். தொடர்ந்து நேற்று காலை செந்தில்முருகன் அந்த கட்டிலிலேயே காயங்க ளுடன் இறந்து கிடந்தார். இது குறித்து மணியனூரில் வசிக்கும் மாமியார் சி ன்ன பிள்ளைக்கு, ஜோதி தெரிவித்தார்.

    அவர் வந்து பார்த்த போது செந்தில்முருகன் தலை, முகம், கை, கால்களில் காயங்கள் இருப்பதை கண்டு போலீசாருக்கு தக வல் கொடுத்தார். ஆட்டை யாம்பட்டி இன்ஸ்பெக்டர் அம்சவள்ளி மற்றும் போலீ சார் சம்பவம் குறித்து விசா ரணை நடத்தினர்.

    பின்னர் செந்தில்முருகன் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே ரூரல் டி.எஸ்.பி. அமல அட்வின் தலைமையிலான தனிப்படை போலீசார் தடய அறிவியல் துறையினர் மற்றும் மோப்ப நாய் லில்லியை அழைத்து வந்து கொலை குறித்த தடயங்களை சேகரித்தனர்.பரபரப்பான தகவல்கள் :தொடர்ந்து இந்த கொலை சம்பவம் குறித்து ஜோதியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ஜோதிக்கும், அந்த பகுதியை சேர்ந்த மனைவியை பிரிந்து வாழும் சுரேஷ் (35)என்ப வருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் சுரேசையும் மடக்கி பிடித்த னர். பின்னர் சுேரஷ் மற்றும் ஜோதியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது வெளியான பரபரப்பு தகவல்கள் வரு மாறு, ஜோதியின் கள்ளக்கா தலனான சுரேஷ், ஜோதியின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றார். மனைவியை பிரிந்து வாழ்ந்த செந்தில் முருகனும், ஜோதி வீட்டிற்கு வந்து சென்றார். அதன்படிநேற்று முன்தினம் இரவு செந்தில்முருகன் குடிபோ தையில் சென்ன கிரியில் உள்ள மனைவி வீட்டிற்கு வந்தார். அப்போது செந்தில்முருக னுக்கும், ஜோதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.இதையடுத்து ஜோதி அருகில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதற்கிடையே நள்ளிரவில் சுரேஷ் அங்கு வந்தார்.அப்போது செந்தில்முரு கன் நீ ஏன் இங்கு வருகிறாய், உன்னால் தானே எனது குடும்பத்தில் இப்படி பிரச்சினை ஏற்படுகிறது. மனைவி கோபித்து கொண்டு செல்கிறாள் என்று கூறி உள்ளார்.

    அடித்து கொலை :இதில் அவர்களுக்கி டையே தகராறு ஏற்பட்டுள் ளது. தகராறு முற்றியதும் ஆத்திரம் அடைந்த சுரேஷ் அருகில் கிடந்த ரீபர் கட்டையை எடுத்து செந்தில் முருகனை சரமாரி யாக தாக்கினார். இதில் காயம் அடைந்த செந்தில்முருகன் துடி துடித்து இறந்ததும் தெரிய வந்துள்ளது.சுரேஷ் மற்றும் ஜோதியிடம் போலீசார் தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடிவில் 2 பேரும் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

    ×