என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்மார்ட் இந்தியா போட்டிகள்"

    • நத்தம் என்‌.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நிறுவன கண்டுபிடிப்பு கவுன்சில் சார்பாக ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்-2023 போட்டிகள் நடைபெற்றது.
    • இவ்விழாவில் 47 அணிகளில் 282 மாணவர்கள் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்கள் மற்றும் படைப்புகளை செய்து காட்டினர்.

    நத்தம்:

    நத்தம் என்.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நிறுவன கண்டுபிடிப்பு கவுன்சில் சார்பாக ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்-2023 போட்டிகள் நடைபெற்றது. விழாவில் கல்லூரி முதல்வர் சுந்தரராஜன் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக மதுரை எம்.எஸ்.எம்.இ., டெவலப்மெண்ட் இன்ஸ்டிடியூட் உதவி இயக்குனர் உமா சந்திரிகா, சென்னை காக்னிசண்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் சீனியர் அசோசியேட் துர்கேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். மாணவி ரோசலின் பானு அனைவரையும் வரவேற்றார். ஜீவதாரிணி சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத்தினார்.

    சிறப்பு விருந்தினர்கள் தொழில்நுட்பங்கள் பற்றிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். இவ்விழாவில் 47 அணிகளில் 282 மாணவர்கள் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்கள் மற்றும் படைப்புகளை செய்து காட்டினர். மாணவர்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்கள் மதிப்பீடு செய்யப்பட்டு ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்-2023க்கு அனுப்பப்பட்டது.

    போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு கல்வி இயக்குனர் (பொறுப்பு) கோபி சாமிநாதன், கல்பனா சான்றிதழ்கள் வழங்கினர். முடிவில் மாணவி ஹரிணி நன்றி கூறினார். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    ×