என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெளி பிரகாரம்"

    • 9 அடி உயரத்தில் 14 கல் தூண்கள் நிறுவப்பட உள்ளது.
    • தை மாதத்தில் கலாஷாபிஷேகம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

    மணவாளக்குறிச்சி :

    குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோவில் களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலும் ஒன்று. பெண்கள் இருமுடி கட்டி இங்கு வந்து அம்மனை வழிபடுவதால் இக்கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது.

    கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் 2-ந்தேதி இக்கோவிலின் கருவறை கூரை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து கோவிலில் தற்காலிகமாக மேற்கூரை அமைக்கப் பட்டது. தொடர்ந்து ஜூன் 14-ந்தேதி தேவ பிரசன்னம் பார்க்கப்பட்டு பரிகார பூஜைகள் நடத்தப்பட்டது. இதையடுத்து ரூ.1.08 கோடி மதிப்பீட்டில் திருப்பணி களை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

    இதைத்தொடர்ந்து தேவசம் பள்ளி வளாகத்தில் மர தச்சு தொழிலாளர்கள் தீவிரமாக மரப்பணி செய்து வந்தனர். மேற்கூரை பணிக்கு உத்திரம், பட்டியல் கூட்டும் பணி நிறைவ டைந்துள்ளது.

    இதையடுத்து மூலஸ்தான மேற்கூரைக்கு திருப்பணி கள் திருக்கோவில் வளாகத்தில் நடந்து வருகிறது.

    வெளி சுற்று பிரகாரத்தில் உள்ள மர அழிகள் மற்றும் கல்தூண்கள் நிறுவும் பணி நேற்று தொடங்கியது. 9 அடி உயரத்தில் 14 கல் தூண்கள் நிறுவப்பட உள்ளது. கல் தூண்கள் நிறுவும் பணியை அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

    இந்த திருப்பணிகளை கோவிலின் மண்டல இணை ஆணையர் கவிதா, பிரியதர்ஷினி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இதில் உதவி ஆணையர் தங்கம், இணை ஆணையர் ரெத்னவேல் பாண்டியன், ஸ்ரீகாரியம் செந்தில்குமார், மராமத்து பொறியாளர் அய்யப்பன், தேவசம் முன்னாள் கண்காணிப்பா ளர் ஜீவானந்தம், அறங்கா வல் குழு உறுப்பினர்கள் ராஜேஷ், ஜோதீஸ்குமார், துளசிதர நாயர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    திருப்பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு வரும் தை மாதத்தில் கலாஷாபிஷேகம் நடத்துவதற்கு திட்டமிடப் பட்டுள்ளது.

    ×