என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "salemdistrict: கைதான பேன்சி ஸ்டோர் உரிமையாளர் வாக்குமூலம் Confession of arrested pansy store owner"

    • கள்ளத்தொடர்பை கண்டித்ததால் வெட்டி கொன்றேன்
    • கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சத்யா எனது கடை யில் வேலை பார்த்தபோது அவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    சேலம்

    சேலம் மாவட்டம் வீர கனூர்ரெட்டியார் தெருவை சேர்ந்தவர் செல்வம் ( 55). வைக்கோல் வாங்கி மொத்த வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி சத்யா. இவர்க ளுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    பேன்சி ஸ்டோர்

    இவரது நண்பர் செல்வ ராஜ் (58),இவர் வீரகனூர் பஸ் நிலைய பகுதியில் பேன்சி ஸ்டோர் மற்றும் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.இவரது கடையில் செல்வம் மனைவி சத்யா வேலை செய்து வந்தார். அப்போது இவர்களுக்கிடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.இதனை செல்வராஜின் மனைவி தாரா கண்டித்தார். இதனால் ஏற்பட்ட தகராறில் கடந்த 2017-ம் ஆண்டு தாராவை செல்வராஜ் கொலை செய்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வந்தார்.இதற்கிடையே குடும்ப தகராறால் செல்வத்தை விட்டு சத்யா பிரிந்தார். இத னால் கடந்த 4 ஆண்டு களாக வாழப்பாடி பகுதியில் சத்யா தனியாக வசித்து வந்தார். இதையடுத்து சத்யாவை, செல்வராஜ் மீண்டும் தனி யாக சந்தித்து வந்தார். இதனை அறிந்த செல்வம் கண்டித்தார். இதனால் அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    வெட்டி கொலை

    இந்த நிலையில் வீரகனூர் பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு கடையில் அமர்ந்து செல்வம் பேசிக்கொண்டி ருந்தார். அப்போது அங்கு வந்த செல்வராஜ் திடீரென செல்வத்தின் தலையில் வெட்டினார். அதனை தடுக்க முயன்றதில் 2 கைகளிலும் வெட்டு விழுந்தது. இதில் மணிக்கட்டு துண்டானதால் செல்வம் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதனை பார்த்த செல்வராஜ் அங்கிருந்து தப்பியோடினார்.தகவல் அறிந்த வீரகனூர் சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி மைக்கேல் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு யாரும் உத விக்கு வராததால் அந்ததோணி மைக்கேல் தனது காரில் ஏற்றி வீரகனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் அங்கு சேர்த்த சிறிது நேரத்தில் செல்வம் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    வாக்குமூலம்

    இதற்கிடையே செல்வராஜ் போலீசாரிடம் சிக்கினார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது-கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சத்யா எனது கடை யில் வேலை பார்த்தபோது அவருடன் பழக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து அவருடன் நெருங்கி பழகி வந்தேன். இதனை அறிந்த எனது மனைவி என்னை கண்டித்தார். இதனால் ஏற்பட்ட தகராறில் அவரை வெட்டி கொலை செய்தேன். பின்னர் ஜெயிலுக்கு சென்று வெளியில் வந்த நான் கடும் மன உளைச்ச லில் இருந்தேன், இந்த நிலை யில் சத்யாவுடன் மீண்டும் நெருங்கி பழகினேன், இதனை செல்வம் கண்டித்தார்.இதனால் எனக்கு செல்வத்தின் மீது ஆத்திரம் ஏற்பட்டதால் அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தேன், அதன்படி நேற்று எனது பேன்சி ஸ்டோர் அருகே உள்ள ஒரு கடையில் செல்வம் இருப்பதை அறிந்து அங்கு சென்றேன், பின்னர் தான் மறைத்து வைத்து எடுத்து சென்ற அரிவாளால் சரமாரி யாக தலையில் வெட்டி விட்டு தப்பி ஓடினேன், இதில் அவர் இறந்து விட்ட நிலையில் போலீசார் என்ைன கைது செய்து விட்ட னர். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.கைதான செல்வராஜை இன்று கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க போலீ சார் நடவ டிக்ைக எடுத்து வருகிறார்கள்.  

    ×