என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தோல் மருத்துவமனை"

    • மோகன்-விஜில் ராணி தம்பதியரின் மகள் ஜெய நந்தனாவுக்கும் திருமணம் நிச்சியக்கப்பட்டிருந்தது.
    • வசந்தம் குரூப்ஸ் நிறுவனங்களின் பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டு மண மக்களை வாழ்த்தினர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டில் அமைந்துள்ள வசந்தம் தோல் மருத்துவ மனையின் தலைமை மருத்துவர் டாக்டர் செல்வன்-மனைவி கோகிலா ஆகியோரின் மகனும் முன்னாள் எம்.பி.யான எம்.சி. பாலனின் பேரனுமான டாக்டர் ஷரனுக்கும், குமரி மாவட்ட தேங்காய் வியாபாரிகள் நல சங்க தலைவர் மோகன்-விஜில் ராணி தம்பதியரின் மகள் ஜெய நந்தனாவுக்கும் திருமணம் நிச்சியக்கப்பட்டிருந்தது.

    அவர்களது திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி நாகர்கோவில் தேரேகால்புதூரில் உள்ள கெங்கா கிராண்ட்யூரில் நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ. க்கள், முன்னாள் எம்.பி.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், கவுன்சிலர்கள், அரசியல் பிரமுகர்கள், தொழில திபர்கள், நண்பர்கள், உறவினர்கள், வசந்தம் குரூப்ஸ் நிறுவனங்களின் பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டு மண மக்களை வாழ்த்தினர்.

    திருமண விழாவிற்கான ஏற்பாடுகளை மணமக்களின் பெற்றோர், குடும்பத்தினர், நண்பர்கள் செய்திருந்தனர். 

    ×