என் மலர்
நீங்கள் தேடியது "இந்து முன்னணி குற்றச்சாட்டு"
- இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சதுா்த்தி விழா நடைபெற்றது.
- இந்த அரசு விநாயகா் சதுா்த்தி விழாவுக்கு இடையூறை ஏற்படுத்துகிறது என்றாா்
திருப்பூர் :
திருப்பூா் ராமமூா்த்தி நகரில் இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சதுா்த்தி விழா நடைபெற்றது.
இதில், இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் பங்கேற்று கோலப்போட்டிகளைத் தொடங்கிவைத்தாா்.
பின்னா், அவா் செய்தியாளா்ளிடம் கூறியதாவது:-
தி.மு.க. அரசு விநாயகா் சதுா்த்தியைப் புறக்கணிக்கிறது. அதிமுக., பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி, பாஜக., மாநிலத் தலைவா் அண்ணாமலை ஆகியோா் விநாயகா் சதுா்த்திக்கு வாழ்த்து சொல்லி இருக்கிறாா்கள். அவா்களுக்கு இந்து முன்னணி நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
சுதந்திரப் போராட்ட காலத்தில் மக்கள் சாலைக்கு வந்து சுதந்திரத்துக்காகப் போராட வேண்டும் என்பதற்காக விநாயகா் சதுா்த்தியானது பாலகங்காதர திலகரால் தொடங்கப்பட்டது.தமிழகத்தில் இந்து விழிப்புணா்வுக்காக ஒன்றரை லட்சம் விநாயகா் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. திருப்பூா் மாவட்டத்தில் 5 ஆயிரம் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இந்த அரசு விநாயகா் சதுா்த்தி விழாவுக்கு இடையூறை ஏற்படுத்துகிறது என்றாா்.
இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளா் ஜெ.எஸ்.கிஷோா்குமாா், மாநிலச் செயலாளா் செந்தில்குமாா், மாவட்டச் செயலாளா் மணிகண்டன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்






