என் மலர்
நீங்கள் தேடியது "சபா கூட்டம்"
- அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
புதுப்பாளையம்:
செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் பேரூராட்சியில் சிறப்பு வார்டு குழு பகுதி சபா கூட்டம் நடைபெற்றது.
அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு இந்த வார்டு குழு பகுதி சபா சிறப்பு கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு புதுப்பாளையம் பேரூராட்சி மன்ற தலைவர் செல்வபாரதி மனோஜ்குமார் தலைமை தாங்கினார்.
செயல் அலுவலர் முகமது ரிஸ்வான் (பொறுப்பு) முன்னிலை வகித்தார். இந்த சிறப்பு வார்டு சபா கூட்டத்தில் ஒவ்வொரு வார்டிற்கும் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் பேரூராட்சி தலைமை எழுத்தர் ரமேஷ் நன்றி கூறினார்.






