என் மலர்
நீங்கள் தேடியது "வேனில் கடத்தி"
- கன்னியாகுமரிக்கு பார்சல் சர்வீஸ் வேனில் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக
- 90 கிலோ போதை புகையிலை பொருளை போலீசார் பறிமுதல் செய்த னர்
நாகர்கோவில் : பெங்களூரில் இருந்து கன்னியாகுமரிக்கு பார்சல் சர்வீஸ் வேனில் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின்சிறப்பு தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் அந்த சிறப்பு தனிப்படை போலீ சார் நேற்று மதியம் கன்னியாகுமரி ரத வீதியில் உள்ள ஒரு பார்சல் நிறுவனத்துக்கு வரும் பார்சல் சர்வீஸ்வேன்களை கண்காணித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது பெங்களூரில் இருந்து வந்த பார்சல் சர்வீஸ் வேனில் இருந்து ஒரு பண்டலை ஒருவர் எடுத்துக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு மறைந்தி ருந்த சிறப்பு தனிப்படை போலீசார் அவரை சுற்றி வளைத்து அவர் வைத்திருந்த பண்டலை சோதனை செய்தனர். அப்போது அதில் 90 கிலோ தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அந்த 90 கிலோ போதை புகையிலை பொருளை போலீசார் பறிமுதல் செய்த னர். இதைத் தொடர்ந்து அதனை கடத்திக் கொண்டு வந்த வியாபாரியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில்அவர் நாகர்கோவில் பி.டபிள்யூ.டி.ரோட்டைச் சேர்ந்த ஜான் மார்க்கோனா (வயது53) என்பதும் அவர் நாகர்கோவில் மீனாட்சி புரத்தில் பலசரக்கு கடை நடத்திய வருவதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து
நாகர்கோவில் உள்ள கோர்ட்டில் ஆஜர் செய்தனர்.






