என் மலர்
நீங்கள் தேடியது "மரம் சாய்ந்து"
+2
- தருமபுரி அருகே சாலையில் சென்ற கார் மீது மரம் சாய்ந்து விழுந்ததில் 2 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- மரக்கிளைகளின் இடிபாடுகளுக்கு இடையே காரும், இரு சக்கர வாகனமும் சிக்கிக் கொண்டது. இதில் காரை ஓட்டிச் சென்றவருக்கும், இரு சக்கர வாகனத்தில் சென்றவர் என 2 பேர் பலத்த காயமடைந்தனர்.
தருமபுரி:
தருமபுரி நகரம், நேருநகர் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 45). இவர் தருமபுரியில் இருந்து பாப்பாரப்பட்டிக்கு தனது காரில் தாத்தா, பாட்டியை அழைத்து சென்று சாலையில் கொண்டிருந்தார்.
அதேபோல் தருமபுரியில் இருந்து கடகத்தூருக்கு பெரியண்ணன் (55) என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
இந்நிலையில் ராமக்காள் ஏரி சாலையில் இரு வெவ்வேறு வாகனங்களும் சென்று கொண்டிருக்கும் போது அருகே நடப்பட்டிருந்த மரம் சாய்ந்து கார் மற்றும் இருசக்கர வாகனத்தின் மீது விழுந்தது.
மரக்கிளைகளின் இடிபா டுகளுக்கு இடையே காரும், இரு சக்கர வாகனமும் சிக்கிக் கொண்டது.
இதில் காரை ஓட்டிச் சென்ற பன்னீர்செல்வம் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெரியண்ணன் ஆகிய 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.
அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித் தனர். இந்த சம்பவத்தில் காரை ஓட்டிச் சென்றபன்னீர் செல்வத்தின் வயதான தாத்தா பாட்டி இருவரும் அதிர்ஷ்டவசமாக காய மின்றி தப்பி உள்ளனர்.
இதுகுறித்து தருமபுரி நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் ½ மணி நேரத்துக்கு மேலாக தருமபுரி-கிருஷ்ண–கிரி சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






