என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாராயண நிகழ்ச்சி"

    • 26-வது ஆண்டு ஆராதனை விழா 3 நாட்கள் தொடர்ந்து நடந்தது.
    • மதியம் மகா தீபாராதனையும் மகா அன்னதானமும் நடந்தது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே உள்ள மகாதானபுரத்தில் காரிய சித்தி ஸ்ரீராகவேந்திரா மிருத்திகா பிருந்தாவனம் உள்ளது. இங்கு ஸ்ரீராகவேந்திரரின் 352-வது ஆராதனை மற்றும் மகாதானபுரம் ராகவேந்திரா பிருந்தாவனத்தில் 26-வது ஆண்டு ஆராதனை விழா 3 நாட்கள் தொடர்ந்து நடந்தது.

    இதையொட்டி முதல்நாள் காலையில் அபிஷேக மும்அதைத்தொடர்ந்து மதியம் மகா தீபாராதனையும், மகா அன்னதானமும் நடந்தது. மாலையில்தீபாராதனையும், பக்தி இன்னிசை நிகழ்ச்சியும், இரவு ஸ்வஸ்தி தீபாராதனையும் நடந்தது.

    2-வதுநாள்அன்று காலை யில் அபிஷேகமும், விளக்கு பூஜையும் குரு ஸ்தோத்திர பாராயணமும் நடந்தது.மதியம் மகா தீபாராதனையும் மகா அன்னதானமும் நடந்தது.

    மாலையில் மகா தீபாராதனையும் வயலின் இன்னிசை நிகழ்ச்சியும் நடந்தது. இரவு ஸ்வஸ்தி தீபாராதனை நடந்தது. 3-வதுநாள்அன்று காலையில் அபிஷேகமும் மதியம்மகாதீபாராதனையும் அதைத்தொடர்ந்து மகா அன்னதானமும் நடந்தது.மாலையில் தீபாராதனையும், இன்னிசை நிகழ்ச்சியும் நடந்தது. இரவு ஸ்வஸ்தி தீபாராதனை நடந்தது.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மகாதானபுரம் காரியசித்தி ஸ்ரீ ராகவேந்திரா மிருத்திகா பிருந்தாவனத்தின் தலைவர் ராகவேந்திரா மோகன் மற்றும் பக்தர்கள் செய்து இருந்தனர்.

    ×