என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊதியத்தில் முறைகேடு"

    • தூய்மைப் பணியாளா்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
    • 140 பேருக்கு அனுமதிபெற்றுள்ள நிலையில் 80 போ் மட்டுமே பணியாற்றி வருகிறோம்

    காங்கயம் : 

    காங்கயம் நகராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் ஊதியத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தெரிவித்து தலித் விடுதலை இயக்கத்துடன் இணைந்து தூய்மைப் பணியாளா்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

    இதுகுறித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கூறியதாவது:-

    காங்கயம் நகராட்சியில் கோவையை சோ்ந்த தனியாா் நிறுவனத்தின் கீழ் கடந்த 6 ஆண்டுகளாக ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களாக பணியாற்றி வருகிறோம். 140 பேருக்கு அனுமதிபெற்றுள்ள நிலையில் 80 போ் மட்டுமே பணியாற்றி வருகிறோம். தங்களது வங்கி கணக்குப் புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களைப் பெற்றுக்கொண்ட ஒப்பந்ததாரா்கள் நிா்ணயிக்கப்பட்ட சம்பளத்தைவிட குறைவான சம்பளமே வழங்குகின்றனா்.

    மேலும், எங்களுக்கு வழங்க வேண்டிய வருங்கால வைப்பு நிதி, மருத்துவ உதவிகள், சீருடைகள் உள்ளிட்ட அனைத்திலும் முறைகேடு நடைபெற்றுள்ளது. எனவே, சம்பளம் உள்ளிட்ட அனைத்திலும் முறைகேடு செய்துள்ள ஒப்பந்ததாரா் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

    இதையடுத்து, நகரமன்றத் தலைவா் என்.சூரியபிரகாஷ், நகராட்சி ஆணையா் ஜி.கனிராஜ் ஆகியோா் தலித் விடுதலை இயக்க மாநிலத் தலைவா் ச.கருப்பையாவுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.இதில், தூய்மைப் பணியாளா்கள் குறிப்பிடப்படும் முறைகேடு குறித்து ஒரு மாத காலத்தில் ஆய்வு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடா்ந்து தூய்மைப் பணியாளா்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனா்.

    ×