என் மலர்
நீங்கள் தேடியது "ஆவணி பொங்கல் திருவிழா"
- கமுதி அருகே அழகுவள்ளியம்மன் கோவில் ஆவணி பொங்கல் திருவிழா நடந்தது.
- விழா விற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே செங்கப் படையில் பிரசித்தி பெற்ற அழகு வள்ளியம்மன் கோவில் ஆவணி பொங்கல் திருவிழா நேற்று காப்பு கட்டி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்த கோவில் வயல் வெளி பகுதியில் உள்ளது. இந்த கோவிலுக்கு கிராம பொதுமக்கள் மேளதாளம் வான வேடிக்கையுடன் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கொடி மரத்திற்கு அபிஷேகம் செய்ய மஞ்சள் நீரை குடங்களில் தலையில் சுமந்து, கொடி மரத்தில் ஏற்றப்பட வேண்டிய அம்மன் உருவம் பொறித்த கொடியை ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
ஊர்வலம் கோவிலை வந்தடைந்த பின்பு கணபதி ஹோமம், யாகசாலை பூஜை நடைபெற்றது. பின்னர் மூலவர் அழகு வள்ளியம்மன் மற்றும் கொடிமரத்திற்கு பால், தயிர், திரவியம், பன்னீர் உட்பட 16 வகை யான மூலிகை அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் வேத மந்திரங்கள் முழங்க கொடி மரத்தில் அம்மன் உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது. பின்னர் அம்மனுக்கு காப்பு கட்டிய பின்பு நேர்த்திக்கடன் செலுத்தும் 300-க்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள், சிறுவர், சிறுமியர் காப்புக் கட்டி விரதத்தை தொடங்கினர்.அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து 10 நாட்கள் விரதம் இருக்கும் பக்தர்கள் தங்களது, நேர்த்திக்கடன்களை செலுத்தும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற உள்ளது. அன்று அக்னிசட்டி, பூக்குழி இறங்குதல், வேல் குத்துதல், சாக்கு வேஷம் சேத்தாண்டி வேஷம் உட்பட பல்வேறு நேர்த்திக் கடன்கள் செலுத்தும் நிகழ்ச்சி நடை பெற உள்ளது. மேலும் தினமும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.






