என் மலர்
நீங்கள் தேடியது "An area of about 100 acres is the mung bean crop"
- ஏரியில் வெண்டைக்காய் கொட்டப்பட்ட விவகாரம்
- கிலோ 7, 8 ரூபாய்க்கு வியாபாரிகள் கேட்கின்றனர்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் வெண்டைக்காய் பயிரிட்டு உள்ளனர்.
தினமும் பல டன் எடையுள்ள வெண்டை க்காய்கள் அறுவடை செய்து விற்பனைக்காக மார்க்கெட்டுக்கு கொண்டு வருகின்றனர். வியாபாரிகள் ரூ.7 முதல் 8-க்கு வெண்டைக்காய் விற்பனைக்காக கேட்கின்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த வியாபாரிகள் மிகவும் வேதனை அடைந்து சாலை ஓரங்களில் வெண்டைக்காய்களை கொட்டி விட்டு செல்கின்றனர்.
ஒரு சில விவசாயிகள் மீன்களுக்கு உணவாகும் வகையில் மூட்டை மூட்டையாக எடுத்துச் சென்று ஏரிகளில் கொட்டி வருகின்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த தோட்டக்கலை துணை இயக்குனர் கயல்விழி நேற்று சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தார்.
பின்னர் கயல்விழி கூறியதாவது:- வெண்டைக்காய் தற்போது கிலோ 7,8 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது வெண்டைக்காய் ஏரியில் கொட்டியவர் ஒரு புதிய வியாபாரி என தெரிகிறது.அவர் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்த வெண்டைக்காய்கள் விற்பனை யாகாமல் இருந்து ள்ளது. வெண்டைக்காயை மீன்கள் விரும்பி சாப்பிடும் என்பதாலும் அதனை மீன்களுக்காக ஏரியில் கொட்டியுள்ளார்.
வெண்டைக்காய் விலையில் வீழ்ச்சி ஏதும் கிடையாது. ஏரியில் வெண்டைக்காய்களை கொட்டிய வியாபாரி யார் என தெரியவில்லை.வெண்டைக்காய் ஏன் தேங்கியுள்ளது என்பது குறித்து வேளாண் துறையினர், தோட்டக்கலை துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் .இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்:-
திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வெண்டைக்காய் பயிரிடப்பட்டு உள்ளது. விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டு கிலோ 7, 8 ரூபாய்க்கு வியாபாரிகள் கேட்கின்றனர்.
வெண்டைக்காயை அறுவடை செய்ய ஒருவருக்கு ரூ.200 கூலி தருகிறோம். விலை வீழ்ச்சியால் அறுவடை செய்யும் கூலி கூட கிடைப்பதில்லை. இதனால் விவசாயிகள் நஷ்டம் அடைந்து வருவதாக தெரிவித்தனர்.






