என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்லூரி கருத்தரங்கு"

    • அன்னை பாத்திமா கல்லூரியில் கருத்தரங்கு நடந்தது.
    • வாழ்வின் அனைத்து அழுத்தங்களில் இருந்து விடுபட்டு புத்துணர்வு பெற சுற்றுலா உதவும் என்று கல்லூரி முதல்வர் பேசினார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம், திரு–மங்கலம் அருகே ஆலம்பட்டி–யில் அமைந்துள்ள அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுற்றுலா மேலாண்மை, ஓட்டல் மேலாண்மை, பி.பி.ஏ., ஏவியேசன், ஆஸ்பி–டல் மேனேஜ்மென்ட், எம்.பி.ஏ. போன்ற பட்ட படிப்பு–கள் கற்றுத் தரப்படுகிறது.

    ஏராளமான கேரள, வட மாநிலம் மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் இங்கு பயின்று வருகிறார்கள். கல்லூரி தாளாளர் எம்.எஸ்.ஷா மற்றும் தலைமைச் செயல் அதிகாரி சகிலா ஷா ஆகி–யோரின் ஆலோசனை பேரில் கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர் தலைமையில் சுற்றுலா பற்றிய ஒருநாள் கருத்தரங்கம் தமிழ்த்துறை சார்பில் நடத் தப்பட்டது.

    கருத்தரங்கைத் துவக்கி வைத்த கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர், உல களவில் சுற்றுலாத்துறை மிகப் பெரியளவில் வளர்ந் துள்ளது எனவும், மாலத்தீவு, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் சுற்றுலாத்துறை வருவாய் ஈட்டும் முக்கிய துறையாக இருக்கிறது என–வும், மனிதன் தன் வாழ்வில் உண்டாகும் அழுத்தங்களில் இருந்து விடுபட்டு புத்து–ணர்வு பெற சுற்றுலா உத வும் என்பதில் துளியள வும் ஐயமில்லை எனவும் கூறி னார்.

    சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கல்லூரி யின் சுற்றுலாத்துறை தலை வர் டாக்டர். நளாயினி, உலகின் பல சுற்றுலா தலங்கள் பற்றியும் அவற்றின் முக்கியத்துவத்தையும் எடுத் துரைத்து சுற்றுலாத்து–றையில் குவிந்து கிடக்கின்ற வேலை வாய்ப்புகள் பற்றி–யும் எடுத்துரைத்தார். பின் னர் மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு விடையளித் தார்.

    முன்னதாக, தமிழ்த்து–றைப் பேராசிரியர் ஜோதி வரவேற்றார். இக்கருத்த–ரங்கில் தமிழ் துறைப் பேரா சிரியர்கள் சிங்கராஜா, ஆறு முகஜோதி, இன்பமேரி, சிவசுந்தரி, வணிகவியல் துறை பேராசிரியர் அப்துல்லா, வரலாற்று துறை தலைவர் பேராசிரியர் மணி மேகலை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பேராசிரியர் க–ளும்,

    தமிழ், வரலாறு, வணிகவி யல், ஓட்டல் மேனேஜ்மென்ட், பாரன்சிக் சயின்ஸ் மற்றும் சுற்றுலாத் துறையைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளும் கலந்து கொண்டனர். நிகழ்ச் சிக்கான ஏற்பாடுகளை பேராசிரியர் ராமுத்தாய் தலைமையில் மாணவர்கள் செய்திருந்தனர். முடிவில் பேராசிரியர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.

    ×