என் மலர்
நீங்கள் தேடியது "போக்குவரத்து துறையினர் ஆய்வு"
- மாவட்டத்தில் இயக்கப்படும் பள்ளி, கல்லூரி வாகனங்களின் ஆவணத்தின் நகல் ஓட்டுநரிடம் வழங்க வேண்டும்.
- அனுபமில்லாத ஓட்டுநர்களை வாகனம் இயக்க அனுமதிக்க கூடாது.
பென்னாகரம்,
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியில் இருந்து கிராமப் பகுதிகளுக்கு செல்லக்கூடிய பள்ளி, கல்லூரி வாகனங்களை தருமபுரி வட்டார போக்கு வரத்து அலுவலர் தாமோ தரன் உத்தரவின் பேரில், மோட்டார் வாகன ஆய்வா ளர்கள் வெங்கடசாமி, தரணிதரன் ஆகியோர் பென்னா கரத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது சுமார் 30-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி வாகனங்க ளில் அவசரகால வழி, வாகனத்தின் ஆவணங்கள், ஓட்டுநர் உரிமங்கள், அரசின் விதிமுறைகள் பின்பற்றப் படுவது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் பள்ளி வாகனத்தில் அதிக அளவி லான குழந்தைகளை ஏற்றுதல், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் இயக்குதல், அனுபவம் இல்லாமல் பள்ளி, கல்லூரி வாகனங்களை இயக்குதல் உள்ளிட்ட குற்றங்க ளுக்காக ஓட்டுநர்கள் மற்றும் நான்கு வாகனங்களுக்கு சுமார் 26 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் சாலை வரி செலுத்தாத ஜே.சி.பி. வாகனத்திற்கு ரூ.12,500 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் மாவட்டத்தில் இயக்கப்படும் பள்ளி, கல்லூரி வாகனங்களின் ஆவணத்தின் நகல் ஓட்டுநரிடம் வழங்க வேண்டும். அனுபமில்லாத ஓட்டுநர்களை வாகனம் இயக்க அனுமதிக்க கூடாது. வாகனம் இயக்கும்போது செல்போன் பயன்படுத்தக் கூடாது. சீருடை அணியாமல் வாகனங்களை இயக்கக் கூடாது. வாகனங்களில் அதிக அளவிலான குழந்தை களை ஏற்றி செல்லக்கூடாது.
கட்டாயம் பேருந்து பணியாட்கள் வைத்திருத்தல் வேண்டும். அரசின் விதிமுறைகளை பின்பற்றி வாகனங்களை இயக்க வேண்டும் என பள்ளிக் கல்லூரி வாகன ஓட்டுநர் களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி எச்சரிக்கை விடுத்தனர்.






