என் மலர்
நீங்கள் தேடியது "திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம்"
- சமூகப்பணி மேற்கொள்பவர்களுக்கான ஆற்றுப்படுத்துதல் திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது.
- இந்நிகழ்விற்குக் கல்லூரிச் செயலரும், சமூகப் பணித்துறைத் தலைவருமான ராபர்ட் ரமேஷ் பாபு தலைமை வகித்தார்.
தருமபுரி,
தருமபுரி தொன் போஸ்கோ கல்லூரியில் சமூகப் பணித்துறை சார்பில் சமூகப்பணி மேற்கொள்பவர்களுக்கான ஆற்றுப்படுத்துதல் திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்விற்குக் கல்லூரிச் செயலரும், சமூகப் பணித்துறைத் தலைவருமான ராபர்ட் ரமேஷ் பாபு தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ஆஞ்சலோ ஜோசப் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார்.
இப்பயிலரங்கில் சிறப்பு அழைப்பாளராகச் சமூகப் பணித்துறைப் உதவிப் பேராசிரியை நிர்மல் ஜெஸ்ஸி கலந்து கொண்டு, கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்குத் தேவையான உணர்வு மேலாண்மை, ஆளுமைப் பண்பு மேம்பாடு, உளவியல் சிக்கல்களில் இருந்து தீர்வு காணுதல் போன்றவற்றை குறித்து செய்முறை விளக்கம் அளித்ததோடு, தொழில் முறையாக ஆலோசனைகள் வழங்கவும் பயிற்றுவித்தார்.
இந்நிகழ்வில் கல்லூரித் துணை முதல்வர் பாரதி பெர்னாட்ஷா, பொருளாளர் அந்தோணி பாப்பு ராஜ், பேராசிரியர்கள் மாணவ, மாணவியர் எனப் பலரும் கலந்து கொண்டனர். சமூகப் பணித்துறை இரண்டாம் ஆண்டு மாணவி காவியாஞ்சலி அவர்கள் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.
சமூகப்பணி மேற்கொள்ளும் அனைவருக்கும் தொழில்முறையில் ஆலோசனைகள் வழங்கும் திறன் அவசியம் என்பதை உணர்த்தும் விதமாக அமைந் திருந்த இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளைத் துறைப் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.






