என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெ.எஸ்.எஸ். மருந்தியல் கல்லூரி"

    • 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்க வேண்டும் என பேசினார்
    • மாணவ-மாணவிகள் உறுதியேற்றனர்

    ஊட்டி,

    பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஊட்டி ஜெ.எஸ்.எஸ் மருந்தாக்கவியல் கல்லூரியில் மாணவர்கள் உறுதியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் தனபால் தலைமை தாங்கினார். துணை முதல்வர் அருண், செயலர்கள் கவுசல்யா, முருகப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

    நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் தனபால் பேசுகையில், 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பது ஜனநாயக கடமை. பணம் வாங்காமல் நேர்மையாக வாக்களிக்க வேண்டும் என பேசினார். தொடர்ந்து நூறு சதவீதம் வாக்களிப்போம், எங்கள் வாக்குகள் விற்பனைக்கு அல்ல என்று மாணவ-மாணவிகள் உறுதிமொழியேற்றனர்.

    ×