என் மலர்
நீங்கள் தேடியது "வாடாமல்லி பூக்கள் தேக்கம்"
- அத்தப்பூ கோலத்துக்கு பயன்படும் வாடாமல்லி, சம்பங்கி, செண்டுமல்லி உள்ளிட்ட பூக்கள் அதிக அளவு கொண்டுவரப்பட்டன.
- தற்போது ஓணம் பண்டிகைக்கான பூக்கள் விற்பனை முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் பூ மார்க்கெ ட்டில் கடந்த 1 வாரமாக பல்வேறு கிராமங்களில் இருந்து அதிக அளவு பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. கேரளாவில் நாளை ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இதற்காக அதிக அளவு பூக்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டன.
குறிப்பாக அத்தப்பூ கோலத்துக்கு பயன்படும் வாடாமல்லி, சம்பங்கி, செண்டுமல்லி உள்ளிட்ட பூக்கள் அதிக அளவு கொண்டுவரப்பட்டன.
மேலும் ஆவணி மாத முகூர்த்த நாட்கள் காரண மாகவும், அதிக அளவு பூக்கள் கொண்டு வரப்பட்டு விலை உச்சத்தில் விற்பனை யானது. தற்போது ஓணம் பண்டிகைக்கான பூக்கள் விற்பனை முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் இன்று 30 டன் வாடாமல்லி பூக்கள் வந்த நிலையில் 10 டன் விற்பனை யாகாமல் தேக்கமடைந்து ள்ளது.
மேலும் பெரும்பாலான பூக்களும் விலை சரியத் தொடங்கியுள்ளது. நேற்று கிலோ ரூ.1000க்கு விற்ற மல்லிகை இன்று ரூ.500க்கு விற்கப்பட்டது. முல்லை ரூ.150, கனகாம்பரம் ரூ.300, ஜாதிப்பூ ரூ.250, ரோஜா ரூ.70, கோழிக்கொண்டை ரூ.30, செண்டு மல்லி ரூ.20, சம்பங்கி ரூ.120 என விற்பனையானது. நேற்று கிலோ ரூ.30க்கு விற்கப்பட்ட வாடாமல்லி இன்று ரூ.10க்கு விற்பனையானது. இதனால் விவசாயிகள் கவலை யடைந்தனர்.






