என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "350 கிலோ எடையில் மாலைகள்"

    • நாகர்கோவில் மாவட்டம் தோவாளை சுடலை மாடசாமி கோவில் நிர்வாகிகள் சந்தித்து பாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பு, உலர் திராட்சை பிஸ்தா, செரி பழ மாலை சுவாமிக்கு படைக்க ஆர்டர் கொடுத்தனர்.
    • பூக்களால் உருவான மாலைகளை போன்று உலர் பொருட்களால் உருவான மாலை மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள பழைய காமன்பட்டியை சேர்ந்தவர் செல்வகுமார். இவர் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் பூக்கட்டி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவரை நாகர்கோவில் மாவட்டம் தோவாளை சுடலை மாடசாமி கோவில் நிர்வாகிகள் சந்தித்து பாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பு, உலர் திராட்சை பிஸ்தா, செரி பழ மாலை சுவாமிக்கு படைக்க ஆர்டர் கொடுத்தனர்.

    ஆவணி மாத திருவிழாவிற்கு சுமார் 350 கிலோ எடை கொண்ட 3 மாலைகள் கட்டப்பட்டு நாகர்கோவில் மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டது. இம்மாலையை இப்பகுதி பொதுமக்கள் ஆச்சரியத்தோடு பார்த்தனர். பூக்களால் உருவான மாலைகளை போன்று உலர் பொருட்களால் உருவான மாலை மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது.

    இது குறித்து மாலை கட்டியவர் கூறியதாவது, பாதாம், பிஸ்தா, கருப்பு உலர் திராட்சை ,செரி பழம், பருப்பு ஆகிய பொருட்கள் கொண்டு சுமார் 350 கிலோ எடையில் மாலை செய்யப்பட்டுள்ளது. மாலை செய்வதற்கு சுமார் ரூ.3.50 லட்சம் வரை செலவாகும் என தெரிவித்தார்.

    ×