என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சகாயாமாத பள்ளி"

    • விஜய் வசந்த் எம்.பி. அவரின் சொந்த நிதியில் இருந்து லேப்-டாப் பள்ளிக்கு வழங்கினார்
    • பள்ளியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள்

    திருவட்டார் :

    குலசேகரம் அருகே ஈஞ்சக்கோடு பகுதியில் சகாயாமாதா நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியின் பயன்பாட்டிற்காக விஜய் வசந்த் எம்.பி. அவரின் சொந்த நிதியில் இருந்து லேப்-டாப் பள்ளிக்கு வழங்கினார். பள்ளியின் தலைமையாசிரியர் தெய்வமலர்வழி பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் பொன்மனை பேரூராட்சி தலைவர் அகஸ்டின் தலைமை தாங்கினார். பொன்மனை நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜான் போஸ்கே முன்னிலை வகித்தார்.

    அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழு உறுப்பினர் ரெத்தினகுமார், கவுன்சிலர்கள் சுஜா, ஜாஸ்மின், அமலா புஷ்பம் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×