என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டண வசூல் முறை மாற்றியமைப்பு"

    • பழைய கட்டணம் முறையே தொடரும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் அனைத்து இடங்களுக்கும் ஒரு நபருக்கு ரூ.30 என வசூலித்தனர்.
    • இதனால் ஆத்திரமடைந்த டாக்சி டிரைவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் மோயர்சதுக்கம், பைன்பாரஸ்ட், தூண்பாறை, குணாகுகை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன. 12 கி.மீ சுற்றளவில் உள்ள இந்த சுற்றுலா தலங்களுக்கு ஒரே இடத்தில் ரூ.30 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. மேலும் வாகனங்களின் நுழைவுகட்டணம், காமிரா கட்டணம் உயர்த்தப்பட்டது.

    இதற்கு டாக்சி டிரைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மாவட்ட வனஅலுவலர் யோகேஸ்குமார் மீனாவிடம் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. பழைய கட்டணம் முறையே தொடரும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் அனைத்து இடங்களுக்கும் ஒரு நபருக்கு ரூ.30 என வசூலித்தனர்.

    இதனால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட சுற்றுலா வாகன ஓட்டிகள் முடிவு செய்தனர். நகர்மன்ற தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன் ஆகியோரிடம் தகவல் தெரிவித்து மோயர் சதுக்கத்தில் உள்ள கட்டண வசூல் நிலையத்திற்கு சென்றனர். ஆனால் அங்கு முறையான தகவல் தெரிவிக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த டாக்சி டிரைவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஒரு மணிநேர போராட்டத்திற்கு பின்னர் மாவட்ட உதவி வனபாதுகாவலர் சக்திவேல் டாக்சி டிரைவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அவர்கள் பல்வேறு கோரிக்கை விடுத்தனர். இதனைதொடர்ந்து மாவட்ட வனஅலுவலர் யோகேஷ்குமார் மீனா கூறுகையில், வருகிற 28-ந்தேதி வரை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு பழைய கட்டணமுைறயே வசூலிக்கப்படும்.

    உள்ளூர் சுற்றுலா வாகனங்கள் நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. பேரிஜம் ஏரிக்கு செல்ல பழைய கட்டுப்பாடுகள் தொடரும் என்றார்.

    ×