என் மலர்
நீங்கள் தேடியது "தொண்டர்கள் திரளாக வரவேண்டும்"
- திண்டுக்கல் மாவட்ட எல்லையான தோமையார்புரம் பகுதியில் கொண்டு வரப்பட்ட தொடர் ஜோதியை கிழக்கு, மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
- மதுரையில் நாளை நடைபெறும் பொன்விழா எழுச்சி மாநாட்டுக்கு கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும் என்றார்.
திண்டுக்கல்:
மதுரையில் அ.தி.மு.க. சார்பில் பொன்விழா எழுச்சி மாநாடு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த மாநாட்டையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் இருந்து ஜோதி ஓட்டம் தொடங்கியது.
பல்வேறு ஊர்களை கடந்து வந்த இந்த ஜோதி திண்டுக்கல் மாவட்டம் வந்தடைந்தது. திண்டுக்கல் மாவட்ட எல்லையான தோமையார்புரம் பகுதியில் கொண்டு வரப்பட்ட தொடர் ஜோதியை கிழக்கு, மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அ.தி.மு.க. பொருளாளரும், மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன், துணைப் பொதுச் செயலாளரும், கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா.விசுவநாதன் ஆகியோர் ஜோதி ஓட்டத்தை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் ராஜ்மோகன், மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜ்மோகன், கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகன், சார்பு அணி நிர்வாகிகள் பாரதிமுருகன், யூசுப்அன்சாரி, கோபி, ராஜன், மேற்கு பகுதி செயலாளர் சேசு, மின்சார பிரிவு திட்ட செயலாளர் பாலாஜி, ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி, மயில்சாமி, அகரம் பேரூராட்சி செயலாளர் சக்திவேல், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர், திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசுகையில், மதுரையில் நாளை நடைபெறும் பொன்விழா எழுச்சி மாநாட்டுக்கு கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும் என்றார்.






